அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள யூதர்களின் வழிபாட்டுதலத்திற்கு இனந்தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ வைத்துள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீராகள் அந்தப் பகுதிக்கு சென்றவேளை யூதர்களின் வழிபாட்டுதலமானது முற்றாக எரியுண்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் வழிபாட்டிற்காக யூதவழிபாட்டுத் தலத்திற்குள் சிலர் காணப்பட்டவேளையில் தீயானது மூட்டப்பட்டதுடன், பெட்ரோல் குண்டும் வீசப்பட்டதாக சமூக தலைவர்கள் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார்.
வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட வன்முறை என கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது சமூகத்தில் பகைமை உணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.