இன்றையதினம்(4) யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் வைத்து 183 கிலோ கேரளக் கஞ்சாவுடன் டிங்கி படகு ஒன்றும் மீட்கப்பட்டது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை இன்று அதிகாலை 3.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
92 கஞ்சா பொட்டலங்கள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட படகு மற்றும் கஞ்சா பொட்டலங்கள் என்பன யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ADVERTISEMENT
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.