நுவரெலியா லொய்னொன் தோட்டப் பகுதியில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) பிற்பகல் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவை, லொய்னொன் தோட்டப் பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஆவார்.
ADVERTISEMENT
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது திக்ஓயா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.