மாத்தளை ஒவிலிகந்த பிரதேசத்தில் உள்ள வயலிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மாத்தளை ஒவிலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவராவர்.
ADVERTISEMENT
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 23 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது மாத்தளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.