• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 10, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்!

User1 by User1
November 22, 2024
in இலங்கை செய்திகள்
0 0
0
இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்!
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர்.

பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 22.11.2024 இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு ஆளுநர், எதிர்வரும் நாட்களில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதன் நகர்வுப் பாதை சரியாக இன்னமும் கணிக்கப்படவில்லையாயினும், நாம் அதை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தங்களுடன் இருக்கவேண்டும்.

பருவமழை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் – செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னதாக, எமது பிரதேசத்திலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் துப்பரவாக்கப்பட்டிருக்கவேண்டும். சில இடங்களில் வாய்க்கால்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை சட்டரீதியாக அணுகி உடனடியாக இடித்து அகற்றுங்கள். தேவையேற்படின் பொலிஸாரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

ஒவ்வொரு திணைக்களங்களும் மற்றைய திணைக்களங்களைப் பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக இந்தப் பணிகளை செய்யுங்கள். மேலும் பல இடங்களில் வாய்க்கால்களுக்குள், வீதிகளில் மக்கள் குப்பைகளை வீசுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுதான் வழி. பல தடவைகள் விழிப்புணர்வுகளை செயற்படுத்தியும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை ஊடாக தண்டிக்கவேண்டும் என்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 வெள்ள அபாய இடர் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் இங்கு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்திலும் இடரை எதிர்கொள்வதற்கு தயாரான நிலையில் இருப்பதாக மேலதிக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில், மன்னார் மாவட்ட மருத்துவமனையூடாகச் செல்லும் கால்வாய் துப்புரவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட மாவட்டச் செயலர், மக்கள் இடரின்போது இடம்பெயர நேரிட்டால் அவர்களை தங்க வைப்பதற்குரிய நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்வாய்கள் அனைத்தும் ஏற்கனவே துப்புரவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டினார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர், யாழ். மாவட்டத்தில் நேற்று 6 மணி நேரத்தினுள் 130 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவானமையால் திடீரென வெள்ள நிலைமை ஏற்பட்டது என்று குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்தின் உப்பாறு மற்றும் தொண்டமனாறு நன்நீரேரிகளினதும், வழுக்கையாறினதும் வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் தடுப்பணை கதவுகள் இம்முறை முன்னதாகவே திறக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்படும் நிலையில் அதைக் கருத்தில் கொண்டு அவை திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 18.3 அடியாக உள்ளது. 350 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவானால் 30 அடி வரையில் நீர் மட்டம் உயர்வடையக்கூடும். இருப்பினும் நீர் வெளியேற்றும் வாய்க்கால்களை அண்மித்து உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று குறிப்பிட்டார்.

இடர்நிலைமை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இரவிலும் பணியாற்றுவதற்கு பணியாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி குறிப்பிட்டார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான வீதிகளை ஒட்டி மக்கள் வீட்டு மதில்களை அமைத்திருப்பதன் காரணமாக, வெள்ளநீர் வழிந்தோடக்கூடிய வழிமுறைகளை உருவாக்க முடியாமல் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக வீடுகள் மற்றும் மதில்கள் அமைப்பதற்கான அனுமதியைப் பெற்ற பின்னர் அதற்கு முரணாக அவற்றை அமைப்பதால் இந்த நிலைமை ஏற்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே அனுமதியை வழங்குவதுடன் மாத்திரமில்லாது, அவற்றை தொடர் கண்காணிப்புக்கும் உட்படுத்த வேண்டும் என கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் இங்கு குறிப்பிட்டார்.

இடர்நிலைமையின் போது தீவகத்திலுள்ள நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொள்ளவேண்டும் எனவும், கடல் மார்க்கமாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப்படையினர் உதவவேண்டும் என்றும் சுகாதாரப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்தார்.

கடற்படையினர் தமது உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர். குறிகாட்டுவான் இறங்குதறையிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கும் இரண்டு படகுகளையும், புயல் நிலைமை ஏற்பட்டால் பாதுகாத்து தருவதற்கு கடற்படையினரின் உதவியை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கோரினார். அதற்கும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்தனர்.

கால்நடைகள் கடந்த காலத்தில் இடர்நிலைமையில் அதிகளவில் உயிரிழந்தமையை கருத்தில்கொண்டு, கால்நடைகளை முற்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதற்குரிய ஒழுங்குகள் கண்டாவளை மற்றும் நானாட்டானில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

வீதிகளில் குப்பைபோடுபவர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் தமக்கு சமர்ப்பித்தால் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என வடக்கு மாகாண சிரேஸ்ட பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார். இதேவேளை, யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வீதிகளில் குப்பைபோடுபவர்களிடம் தண்டப்பணம் அறவிடுவதற்குரிய வர்த்தமானி தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மாநகர சபை சார்பில் பங்கேற்ற பிரதிநிதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையோரப் பகுதிகளில் இராணுவத்தினர் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் மக்கள் மீண்டும் மீண்டும் அங்கு குப்பைகளைப் போடுவதாகவும் இது கவலையளிப்பதாகவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி சார்பில் பங்கேற்ற பிரதிநிதி தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் குப்பைகளை அகற்றி துப்பரவான நகராக்குவதற்கான நடவடிக்கையை தாம் யாழ். மாநகர சபையுடன் இணைந்து செய்வதற்கு பொறுப்பெடுப்பதாக உள்ளூராட்சி அமைச்சின் செயலர் தெரிவித்தார்.

இதேவேளை, இடர் நிலைமைகளை எதிர்கொள்வதற்காக கடற்படையினரின் 16 குழுக்கள் படகுகளுடன் தயாராக இருப்பதாகவும் மேலதிகமாக தேவைப்பட்டால் அதையும் பெற்றுக் கொள்ளக்கூடிய தயார் நிலையில் தாம் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

எதிர்வரும் இடர்நிலைமைகளின் போது பொதுமக்கள் இடர்முகாமைத்துவப் பிரிவின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் எனவும், அதேநேரம் யாழ். மாவட்டத்தில் 021 222 1676, 0773957894 என்ற இலக்கங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 021 228 5330, 0772320528 என்ற இலக்கங்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 021 229 0054 என்ற இலக்கத்துக்கும், மன்னார் மாவட்டத்தில் 023 211 7117 என்ற இலக்கத்துக்கும், வவுனியா மாவட்டத்தில் 0760994883 என்ற இலக்கத்துக்கும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thinakaran
398 676.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 6 days ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 6 days ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 6 days ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 1 year ago
  • 4 more
    • User1

      User1

      Related Posts

      பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் உயிரிழப்பு..!

      பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 9, 2025
      0

      பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய தலைமை ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று (9) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக...

      யாழில் எரிந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை..!

      யாழில் எரிந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை..!

      by Thamil
      May 9, 2025
      0

      யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை நேற்று (08.05.2025) தீ விபத்துக்குள்ளாகி...

      கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் ; சி.ஐ.டிக்கு விஜயம் செய்த சிவானந்த ராஜா..!

      கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் ; சி.ஐ.டிக்கு விஜயம் செய்த சிவானந்த ராஜா..!

      by Thamil
      May 9, 2025
      0

      கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சிறுமி தொடர்பான சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளரான...

      இன்று இடம்பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வுகள்..!

      இன்று இடம்பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வுகள்..!

      by Thamil
      May 9, 2025
      0

      யாழ்ப்பாணம் வடமராட்,சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் நடாத்தப்படுகின்ற நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ்...

      சுகாதார சீர்கேட்டில் இயங்கிய உணவகங்கள் ; நீதிமன்றம் விதித்த அபராதம்..!

      சுகாதார சீர்கேட்டில் இயங்கிய உணவகங்கள் ; நீதிமன்றம் விதித்த அபராதம்..!

      by Thamil
      May 9, 2025
      0

      பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் வெதுப்பகப் பொருட்களை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, வெதுப்பகச் சுற்றாடலில் இலையான்கள் பெருக இடமளித்தமை, அழுகலடைந்த உருளைக்கிழங்குகளை...

      தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு..! 

      தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு..! 

      by Thamil
      May 9, 2025
      0

      யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ்க்...

      சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சிநெறி..! 

      சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சிநெறி..! 

      by Thamil
      May 9, 2025
      0

      சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் தேசிய இளைஞர் படைப்பிரிவில் உள்ள மாணவர்களுக்கு சமூக மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சியானது இன்று (09) தேசிய இளைஞர் படையணி...

      ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏல விற்பனை..!

      ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏல விற்பனை..!

      by Thamil
      May 9, 2025
      0

      ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 27 சொகுசு வாகனங்கள் மற்றும் சேவையிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...

      இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு பூட்டு..!

      இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு பூட்டு..!

      by Thamil
      May 9, 2025
      0

      "வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் குறித்த...

      Load More
      Next Post
      ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தின் ஒளிவிழா.!

      ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தின் ஒளிவிழா.!

      தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா

      தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா

      போலி கிரீம் வகைகளுடன் மூவர் கைது.!

      யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கசிப்புடன் மூவர் கைது!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி