பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லேவெவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பொலன்னறுவை, எல்லேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஆவார்.
ADVERTISEMENT
இந்த முதியவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.