அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த அதிவேக ரயிலில் மோதி இளம் பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் கல்லனமுல்ல, பயாகல பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
களுத்துறை வேலாபுர வித்தியாலயத்திற்கு பின்புறம் உள்ள ரயில் பாதையில் குறித்த யுவதி தண்டவாளத்திற்கு அருகில் நின்று தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.