நாரம்மல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பனாவிட்டிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றின் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (28) ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.