காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹமோதர கடற்கரை பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
60 வயது மதிக்கத்தக்க 05 அடி 03 அங்குலம் உயரமுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.