• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

கம்போடியாவுடனான போட்டியுடன் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்தாட்டத்தையும் இலங்கை இரசிகர்கள் நேசிப்பர் 

User1 by User1
September 5, 2024
in உலக செய்திகள், விளையாட்டுச் செய்திகள்
0 0
0
கம்போடியாவுடனான போட்டியுடன் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்தாட்டத்தையும் இலங்கை இரசிகர்கள் நேசிப்பர் 
Share on FacebookShare on Twitter

கம்போடியாவுக்கு எதிரான AFC ஆசிய கிண்ண சவூதி அரேபியா 2027 தகுதிகாண் போட்டியில் முழுமையாக எதிர்த்தாடும் உத்தியுடன் விளையாடி வெற்றிபெறுவதே இலங்கை அணியின் குறிக்கோள் என இலங்கை கால்பந்தாட்ட அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுநர் அப்துல்லா அல் முத்தய்ரி தெரிவித்தார்.

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையில் கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இன்று வியாழக்கிழமை (05) பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிக்கு முன்பதாக இலங்கை கால்பந்தாட்ட இல்லத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் எவ்வாறு இலங்கை இரசிகர்கள் சிங்கக் கொடியை ஏந்திக்கொண்டு அணியை உற்சாகப்படுத்தகிறார்களோ அதேபோன்ற கலாசாராம் கம்போடியாவுடனான போட்டி முடிவுடன் கால்பந்தாட்டத்திலும் உருவாகி அவர்கள் கால்பந்தாட்டத்தை நேசிக்கத் தொடங்குவார்கள் எனவும் அல் முத்தய்ரி குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

‘கால்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெறுவதாக இருந்தால் ஆக்ரோஷத்துடன் விளையாடவேண்டும். எனவே இலங்கை வீரர்களுக்கு எதிர்த்தாடும் (Attacking) கால்பந்தாட்ட உத்தியை நான் பயிற்றுவித்துள்ளேன். போட்டிகளின்போது அச்சம் கொள்ளக்கூடாது, நம்பிக்கையுடன் விளையாடவேண்டும். அந்த நம்பிக்கை 100 க்கு 1000 வீதமாக இருக்கவேண்டும். அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகியவற்றுடன்  சிறந்த வியூகங்கள், பந்துபரிமாற்றங்களுடன் விளையாடவேண்டும்.

‘அணியில் இடம்பெறும் வீரர்கள் அனைவரிடமும் இலங்கை இரத்தமே ஓடுகிறது. அவர்கள் எங்கு பிறந்தார்கள், எங்கு விளையாடுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினையல்ல. ஆனால், இலங்கையர்களான அவர்கள் ஒன்றிணைந்து விளையாடும் போது அவர்கள் அனைவரும் அரங்குக்குள் சிங்கங்கள். எனவே இன்று முதல் தேசிய கால்பந்தாட்டத்தில் ஒரு மாற்றத்தை, உத்வேகத்தைக் காணக்கூடியதாக இருக்கும். மேலும் கிரிக்கெட்டை இலங்கை இரசிகர்கள் நேசிப்பது போன்று கால்பந்தாட்டத்தையும் இன்றைய போட்டியின் பின்னர் நேசிக்க ஆரம்பிப்பார்கள்

‘உள்ளூர் போட்டிகள் நடைபெறாதது தேசிய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுவதை ஒப்புக்கொள்ள மாட்டேன். இன்று உலகக் கால்பந்தாட்ட அரங்கில் இங்கிலாந்தில்தான் அதிசிறந்த முதல் தர கால்பந்தாட்டம் விளையாடப்படுகிறது. ஆனால், 1966க்குப் பின்னர் இங்கிலாந்தினால் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாமல் போயுள்ளது. போட்டிகள் நடைபெறாதபோது கழக மட்டத்திலும் தனிப்பட்ட ரீதியிலும் வீரர்கள் தொடர்ச்சியாக கடும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். வீரர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடவேண்டும். அவர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை போட்டிக்கு போட்டி புகட்டத்தேவையில்லை. மாறாக அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளேன்’ என்றார்.

இதேவேளை, கம்போடியாவுடனான போட்டியில் திறமையாக விளையாடி வெற்றிபெறுவதே தமது குறிக்கோள் என அணித் தலைவர் சுஜான் பெரேரா தெரிவித்தார்.

‘இலங்கை அணியில் சில காலமாக ஒரே வீரர்கள் விளையாடி வருவதால் சிறந்த புரிந்துணர்வுடனும் வெற்றிபெறும் குறிக்கோளுடனும்  கம்போடியாவை எதிர்கொள்ளவுள்ளோம். எட்டு வருடங்களுக்கு முன்னர் கம்போடியாவிடம் எனது தலைமையில் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தது. ஆனால்,  தற்போது இலங்கை அணியில் மிகத் திறமையான வீரர்கள் இடம்பெறுவதால் எம்மால் சாதிக்கக்கூடியதாக இருக்கும்’ என சுஜான் பெரெரா மேலும் தெரிவித்தார்.

இலங்கையும் கம்போடியாவும் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மோதிக்கொண்டதுடன் 2001இல் 1 – 0 என இலங்கையும் 2016இல் 4 – 0 என கம்போடியாவும் வெற்றிபெற்றிருந்தன.

சர்வதேச கால்பந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் கம்போடியா 180ஆவது இடத்திலும் இலங்கை 205ஆவது இடத்திலும் இருக்கின்றன.

எவ்வாறாயினும், உலக தரவரிசை வெறும் இலக்கங்கள் எனவும் போட்டியின்போது எந்த  அணி மிகச் சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றிபெறும்  எனவும்  ஆர்ஜன்டீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கம்போடிய அணி பயிற்றுநர் பீலிக்ஸ் டல்மாஸ் தெரிவித்தார்.

‘நாங்கள் எந்த அணியையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. மேலும் இலங்கை அணியில் வெளிநாடுகளில் விளையாடும் வீரர்கள் இடம்பெறுவதால் எமது அணி பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும்’ என்றார் அவர்.

இதே கருத்தையே கம்போடிய அணித் தலைவர் தியெரி ஷந்தான் பின் தெரிவித்தார்.  

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டி கம்போடியாவில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும்.                  

Thinakaran
398 673.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 5 days ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 6 days ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 6 days ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 1 year ago
  • 4 more
    • User1

      User1

      Related Posts

      தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய போப்..!

      தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய போப்..!

      by Thamil
      May 8, 2025
      0

      ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்கள் அடுத்த பாப்பரசரை தேர்ந்தெடுத்துள்ளனர். இது வத்திக்கான் நகரத்தில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்திற்கு மேலே உள்ள புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியதன்...

      புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை; கரும்புகை வெளியானது.!

      புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை; கரும்புகை வெளியானது.!

      by Mathavi
      May 8, 2025
      0

      கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனை தெரிவிக்கும் வகையில் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த வாக்குப்பதிவானது...

      ஐ.பி.எல். போட்டிகள் தர்மசாலாவில் இருந்து மும்பைக்கு மாற்றம்

      ஐ.பி.எல். போட்டிகள் தர்மசாலாவில் இருந்து மும்பைக்கு மாற்றம்

      by Sangeetha
      May 7, 2025
      0

      எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டி மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நாளை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ்...

      இன்று  மதியம் இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!

      இன்று மதியம் இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!

      by Sangeetha
      May 7, 2025
      0

      இன்று (07) மதியம் 12.39 மணியளவில் (இலங்கை நேரப்படி) இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தேசிய...

      இன்று புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு

      இன்று புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு

      by Sangeetha
      May 7, 2025
      0

      பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு இன்று (07) தொடங்கும் என்று வாடிகன் அறிவித்தது. அதன்படி இன்று பாப்பரசர் தேர்வு தொடங்குகிறது....

      இந்தியா பின்வாங்குவதை தேர்வு செய்தால் பதற்றத்தைத் தணிக்க நாங்கள் தயார் – கவாஜா ஆசிப்

      இந்தியா பின்வாங்குவதை தேர்வு செய்தால் பதற்றத்தைத் தணிக்க நாங்கள் தயார் – கவாஜா ஆசிப்

      by Sangeetha
      May 7, 2025
      0

      இந்தியாவுடன் பாகிஸ்தான் சமரசத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் தொடந்து தெரிவிக்கையில், "கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள்...

      ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

      ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

      by Sangeetha
      May 7, 2025
      0

      கராச்சி பங்குச்சந்தையான கே.எஸ்.இ. (KSE 100).குறியீடு ஆரம்ப வர்த்தகம் 6.272 புள்ளிகள் சரிந்து 107, 007.68 ஆக சரிந்தது. நேற்றைய தினம் இதே பங்குச் சந்தை 113,568.51...

      பாகிஸ்தான்: இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது

      பாகிஸ்தான்: இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது

      by Sangeetha
      May 7, 2025
      0

      பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்துள்ளது....

      இன்று கொல்கத்தா vs சென்னை – ஐபிஎல் 2025 லீக் ஆட்டம்

      இன்று கொல்கத்தா vs சென்னை – ஐபிஎல் 2025 லீக் ஆட்டம்

      by Sangeetha
      May 7, 2025
      0

      ஐபிஎல் 2025 தொடரின் 57வது லீக் போட்டியில் இன்று (மே 7) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் கொல்கத்தாவின்...

      Load More
      Next Post
      இந்தியாவின் “தரங் சக்தி” பயிற்சியில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் பங்கேற்பு

      இந்தியாவின் "தரங் சக்தி" பயிற்சியில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் பங்கேற்பு

      யாழில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு !

      யாழில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு !

      பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து 5772 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்

      பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து 5772 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி - மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி