குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் திரு. சமிந்த ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (24. 08. 2024) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது இக்காணிப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
ADVERTISEMENT
இச்சந்திப்பில் பலநோக்குக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜஹான், ஜாயா நகர் விவசாய சம்மேளனத் தலைவர் சமீம், உப தலைவர் நிபார், மற்றும் செயலாளர் இஸ்ஸதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.