27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல்

காடுகளுக்குள் நுழைய பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் முடிவு செய்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழையும் போது வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக ரதுகல பழங்குடியின தலைவர் டானிகல மஹாபந்தலகே சுடவன்னில தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு காரணமாக பழங்குடியின மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதற்கு சட்டப்பூர்வ அடையாள அட்டை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக ரதுகல மற்றும் தம்பன பழங்குடியினருக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும், பழங்குடியின தலைவர்கள் வழங்கும் பட்டியலின் பிரகாரம் அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஓய்வூதியதாரர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

User1

மன்னார் வைத்தியசாலையில் இளம் தாய் மரணம் விவகாரம் விசாரணை முடிவு

User1

கொழும்பில் பொலிசாரை புரட்டி எடுத்த பெண்கள்..!

sumi

Leave a Comment