27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலையில் “எரோ பேஸ் 2024” கண்காட்சி ஆரம்பம்

திருகோணமலையில் சீனக்குடா விமானப்படை கல்விபீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் “எரோ பேஸ் 2024” கண்காட்சி, இலங்கை விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல் உதயனி ராஜபக்ஷவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில், கல்வி, தொழில்நுட்ப, மற்றும் வர்த்தக சார்ந்த பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

விமான சாகச நிகழ்வுகள், பரசூட் சாகசங்கள், மோப்ப நாய்களின் திறமைகள், அங்கம்புரம் மற்றும் தற்காப்புக் கலை காட்சிகள், மற்றும் இரவு நேர இசை நிகழ்ச்சிகள் போன்றவை இக்கண்காட்சியின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

அதேநேரத்தில், இலங்கை விமானப்படையின் விமான சாகச நிகழ்வுகள், மீட்புக் குழுவினரின் விசேட மீட்பு நடவடிக்கைகள், மற்றும் டெண்டம் ஜம்ப் போன்ற புதிய சாகச நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

இக்கண்காட்சி 26ஆம் திகதி வரை தினமும் மாலை 3 மணிக்கு நடைபெறும், இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

Related posts

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி.!

sumi

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட வந்த இளைஞனுக்கு அம்மன் கொடுத்த தண்டனை.!!

sumi

கல்வி அமைச்சின் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் G.C.E.A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

User1

Leave a Comment