28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

அவுஸ்திரேலியா பயணமானார் ரணில்

07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க இன்று (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுள்ளார்.

இந்த மாநாடு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் 09 முதல் 10 வரை நடைபெற உள்ளது.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி வெளியேறியிருந்தார்.

ஜனாதிபதியுடன் தூதுக்குழுவொன்றும் சென்றுள்ளதுடன், அவர்கள் முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (08) அதிகாலை 12.45 மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு SK-469 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டு அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்லவுள்ளனர்.

Related posts

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக சுப்பிரமணியம் காட்டம்!

User1

மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்தவர் உயிரிழப்பு!

User1

பொலிசாருக்கு எதிராக தேர்தல் திணைக்களம் மனித உரிமை ஆணைக்குழுவில் நா.உ.எஸ்.கஜேந்திரன் முறைப்பாடு 

User1