பெந்தொட்ட பகுதியில் கடலுக்கு நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பெந்தொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 63 வயதுடைய கசகஸ்தான் நாட்டவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பெந்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.