கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி நாயர். அதனைத்தொடர்ந்து, தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி நாயர், விஜய்யின் ‘தி கோட்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது ‘ஆலம்பனா’ என்கிற திரைப்படம் இவருடைய நடிப்பில் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.
நடிகை பார்வதி நாயர் ஆஷ்ரித் அசோக் என்ற சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ள நிலையில் இன்று இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.