எகொடஉயன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்கொட ஆற்றிலிருந்து நேற்று வியாழக்கிழமை (05) காலை பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஆவார்.
குறித்த பெண் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT
சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.