நேற்றிரவு கிளிநொச்சி A9 வீதி கனகாம்பிகைக்குளம் சிவன்கோயில் முன்பாக இடம்பெற்ற விபத்தில் 56வயதான முதியவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த கார் உள் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு திரும்பி துவிச்சக்கரவண்டியில் சென்ற குறித்த முதியவர் மீது மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 56வயதான முதியவரே உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.