ஐ.பி.எல். தொடரில் முல்லான்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பிரம்சிம்ரன் சிங் 33 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்களும், படிக்கல் 61 ரன்களும் அடித்தனர். ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி இலக்கை நோக்கி பேட்டிங் செய்தபோது 3-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட படிக்கல் பவுண்டரியை நோக்கி அடித்தார்.
பவுண்டரி எல்லையை நெருங்கும்போது பஞ்சாப் வீரர் தடுத்து வீசினார். ஆனால் அதற்குள் விராட் கோலி – படிக்கல் இணை ஓடியே 4 ரன்கள் சேர்த்தது.