18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறும். குறைந்தது 8 வெற்றிகள் பெற்றால் தான் ‘பிளே-ஓஃப்’ சுற்றை நினைத்து பார்க்க முடியும்.
இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 38-வது லீக் போட்டியில் 5 முறை சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் கிங்ஸ் அணிகள் நடத்துகின்றன.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணிக்கு இந்த சீசன் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 7 போட்டிகளில் விளையாடி (கொல்கத்தா, டெல்லி, 3 வெற்றி ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியை (சென்னை, குஜராத், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) சந்தித்துள்ளது. முதல் 5 போட்டிகளில் 4-ல் தோல்வி அடைந்த அந்த அணி சரிவில் இருந்து மீண்டு கடைசி 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வாகை சூடியுள்ளது.
மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் (265 ஓட்டங்கள்), திலக் வர்மா (231), விக்கெட் கீப்பர் ரையான் ரிக்கெல்டன் (180 ஓட்டங்கள்) உள்ளிட்டோர் துடுப்பாட்டத்தில் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் முன்னாள் அணித்தலைவர் ரோகித் சர்மா 6 போட்டிகளில் விளையாடி 82 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார். அவரது பேட்டில் இருந்து பெரிய இன்னிங்ஸ் வெளிப்படுமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பந்து வீச்சில் அணித்தலைவர் ஹர்திக் பாண்ட்யா (11 விக்கெட்), டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர் நம்பிக்கை அளிக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பழைய போர்முக்கு திரும்பி கொண்டிருக்கிறார். சொந்த ஊரில் ஆடுவது கூடுதல் பலமாகும்.
சென்னை அணி நடப்பு வழக்கத்துக்கு மாறாக தொடரில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தொடக்க போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 போட்டிகளில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) சரண் அடைந்தது. முந்தைய போட்டிகளில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஒரு லக்னோவை வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது.
அந்த போட்டியில் லக்னோ நிர்ணயித்த 167 ஓட்டங்கள் இலக்கை 3 பந்துகள் மீதம் வைத்து சென்னை அணி எட்டிப்பிடித்தது. புதிய தொடக்க ஜோடி ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத் ஆகியோர் அளித்த திடமான தொடக்கமும், ஷிவம் துபே, தோனியின் பொறுப்பான துடுப்பாட்டம் அணியை கரைசேர்த்தது.
சென்னை அணிக்கு துடுபாட்டம் தான் பெரும் தலைவலியாக உள்ளது. மிடில் வரிசையில் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் துடிப்பாக ஓட்டங்கள் சேர்க்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரன வலு சேர்க்கிறார்கள்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, மும்பை மோதல் என்ற எப்போதும் அனல் பறக்கும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இனி ஒவ்வொரு போட்டியும் வாழ்வா-சாவா போன்றது என்பதால் வெற்றிக்காக வரிந்துகட்டி நிற்பார்கள்.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் சந்தித்த தொடக்க போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஒட்டுமொத்த ஐ.பி.எல்.இல் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 20 போட்டிகளிலும், சென்னை 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் வான்கடே மைதானத்தில் 12 முறை சந்தித்ததில் மும்பை 7-5 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித்
சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (தலைவர்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.
சென்னை: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா,
ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், தோனி (தலைவர்), ஜொமி ஓவர்டான், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரன.