கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த பொழுது புளியம்பொக்கனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியால் பயணித்த பெண் அணிந்திருந்த மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி அபகரித்துக் கொண்டுதப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விரைவாக செயற்பட்ட தர்மபுர பொலிஸார் சந்தேக நபரை துரத்திச் சென்று இராமநாதபுரம் பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பெண்ணிடம் அபகரிக்கப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் அவர்களின் உடமையில் இருந்து 2.25 m மில்லிகிராம் கெராயினும் 20 கிராம் கேரளா கஞ்சாவும் திருட்டில் ஈடுபடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தடையப் பொருட்கள் மற்றும் சந்தேக நபரை இன்றைய தினம் 28.03.2025 கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்திய போது மேலதிக விசாரணைகளுக்காக மீண்டும் இரண்டு சந்தேக நபர்களையும் மீண்டும் தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.





