கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் மற்றும் மண் கடத்தலில் ஈடுபட்ட கனர டிப்பர் வாகனங்கள், ஏ9 வீதியில் மணல் கொண்டு செல்வதற்கு வீதி தடை அனுமதிப்பத்திரம் அற்ற டிப்பர் வாகனங்கள், சட்டவிரோதமாக அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் அகழ்வுகளில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்களை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.
அத்துடன், சட்டவிரோத அனுமதிப்பத்திரங்கள் தயாரித்து மணல் ஏற்றி சென்றமைக்காகவும், அனுமதிப் பத்திரங்கள் இருந்தும் மணல் ஏற்றி வீதியில் செல்லும் போது முறையற்ற விதத்தில் வீதியில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சென்ற குற்றத்துக்காகவும் பல தரப்பட்ட டிப்பர் வாகனங்களை வீதி போக்குவரத்து பொலிஸாரும் மற்றும் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரும் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.



