மாஹோ இருந்து மட்டக்களப்புக்கு வந்த புகையிரதம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக புகையிரத சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திற்கு வருகைதந்த புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திற்கான பயணங்கள் தடம்புரண்டத்திற்கு அருகில் வரை நடைபெறும் என மட்டக்களப்பு நிலைய பொறுப்பதிகாரி பேரின்பராஜா தெரிவித்தார்.
புகையிரம் தடம் புரண்டுள்ளதன் காரணமாக புகையிரத நிலையத்திற்கு புகையிரதத்தினை கொண்டுவரமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளைய தினம் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக அதில் வருகைதந்த பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.






