கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு குழுக்களிடையே நேற்று புதன்கிழமை ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.