பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரபல நடிகரான சோனு சூட் என்பவரை கைது செய்ய பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ் சினிமாவில் பிரபலமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சோனு சூட், பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வலியுறுத்தி பல தடவைகள் அவருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் காரணமாக குறித்த நபரை கைது செய்யுமாறு பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.