திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று(01) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி புறப்பட்ட வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.
ADVERTISEMENT
வேனின் சாரதியான கிண்ணியாவை சேர்ந்த இளைஞனும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட நால்வர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.





