காலியில் மாணவி ஒருவரின் சில காணொளி அழைப்புகளை இணையத்தளத்தில் பதிவேற்றுவதாக தெரிவித்து, மாணவியொருவரை அச்சுறுத்திய இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காலி – நாகொட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இரண்டு மாணவர்கள் ஆவர்.
குறித்த மாணவி, அவர்களுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணொளி அழைப்பு ஊடாக கருத்துக்களை பரிமாறியுள்ளார். இதன்போது, பதிவு செய்யப்பட்ட காணொளிகளை அடிப்படையாக கொண்டு இந்த அச்சுறுத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
அதற்கமைய, குறித்த இரண்டு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.