பலாங்கொடை நன்பேரியல் சுற்றுலாத் தலத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக சமனலவெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 74 வயதுடையவரே உயிரிழந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவதாவது,
ADVERTISEMENT
அவுஸ்திரேலியாவிலிருந்து 18 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கடந்த 10 ஆம் திகதி இலங்கை வந்துள்ளது. அவர்கள் நேற்றைய தினம் நன்பேரியல் சுற்றுலா தளத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வேளையில் குறித்த அவுஸ்திரேலியா பிரஜை தவறி வீழ்ந்து காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.