கேகாலை, மெதகொட பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை உயிரிழந்துள்ளதாக வரகாப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் மெதகொட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கடந்த 29 ஆம் திகதி இரவு தனது வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் உயிரிழந்தவர் அதிகம் மது அருந்துவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வரகாப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.