கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் ரயிலொன்று தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த மீனகயா கடுகதி ரயிலின் இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
ADVERTISEMENT
இதனால் கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இதன்காரணமாக பிரதான மார்க்கம் மற்றும் கரையோர மார்க்கத்தின் ரயில் சேவைகள் தாமதமடையக்கூடும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.