• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தடை செய்யப்பட்ட மின் சிகரெட்டுகள் தடையின்றி அமோக விற்பனை.!

Mathavi by Mathavi
June 9, 2026
in இலங்கை செய்திகள்.
0
தடை செய்யப்பட்ட மின் சிகரெட்டுகள் தடையின்றி அமோக விற்பனை.!
Share on FacebookShare on Twitter

இலங்கையில் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்ட மின் சிகரெட்டுகள் மற்றும் புகையற்ற புகையிலை தயாரிப்புகள் சந்தையில் இன்னும் மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய ஓர் அபாயகரமான சூழல் நிலவுவது புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

புகையிலை தொழில்துறை அவதான நிலையம் மற்றும் சுகாதாரத்திற்கான இளம் தொழில் வல்லுநர்கள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாய்வின் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.

ஊடக சந்திப்பில் புகையிலை தொழில்துறை அவதான நிலையத்தைச் சேர்ந்த பி. தினேஷ்குமார் தெரிவிக்கையில், “இலங்கையில் ‘தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஒழுங்குமுறைகள் 2016’ இன் கீழ் மின் சிகரெட்டுகளைத் தயாரிப்பது, இறக்குமதி செய்வது மற்றும் விற்பனை செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்ட போதிலும், அவை தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.” – என்றார்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 1 முதல் 15 வரையிலான பகுதிகளில், பொதுமக்களும் விசேடமாக பாடசாலை மாணவர்களும் அதிகம் நடமாடும் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. பாடசாலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் 245 முக்கிய இடங்களைச் சுற்றியுள்ள 1,067 சில்லறை விற்பனைக் கடைகள் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவுகளின்படி, முற்றிலும் தடைசெய்யப்பட்ட போதிலும், பரிசோதிக்கப்பட்ட கடைகளில் புறக்கோட்டை பகுதியில் 3 கடைகளிலும், கிருலப்பனை பகுதியில் 3 கடைகளிலும் மின் சிகரெட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பொதுவாக வெற்றிலை பாக்கு வடிவில் கிடைக்கக்கூடிய புகையற்ற புகையிலை பொருட்கள் 170 கடைகளில் (15.9%) பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமன்றி, சுமார் 176 கடைகளில் இந்த புகையற்ற புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்களும், வணிக ஊக்குவிப்புகளும் பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெள்ளவத்தை, பொரளை, மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிக்கடைகளிலேயே இத்தகைய சட்டவிரோத வணிகமும் விளம்பரங்களும் மிக அதிகளவில் காணப்படுகின்றன.

சந்தையில் நேரடியாக விற்கப்படுவது ஒருபுறமிருக்க, இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மின்-சிகரெட்டுகள் மற்றும் நிகோடின் தயாரிப்புகள் மிகத் தீவிரமாக பரப்பப்பட்டு வருகின்றன. முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் வழியாக இவற்றைச் சட்டவிரோதமாக விற்கும் 213 இணையப்பக்கங்கள் இந்த ஆய்வின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் ‘ஸ்னஸ்’ எனப்படும் நிகோடின் பாக்கெட்டுகள் மிகவும் பரவலாக விற்கப்படுவதோடு, வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு இணையவழி பணப் பரிவர்த்தனை முறைகள் மற்றும் வீடு தேடி வரும் விநியோக வசதிகளும் செய்து தரப்படுகின்றன. இது சிறுவர்களையும், இளைஞர்களையும் மிக எளிதில் நிகோடின் அடிமைகளாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, புகையிலை மீதான வரிகளை உயர்த்துவது என்பது அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தருவதோடு, தொற்றா நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் உலகளாவிய உத்தியாகும். ஆனால், இலங்கையில் இந்த வரிவிதிப்புக் கொள்கைகளை முடக்குவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் புகையிலை தொழில்துறை பல்வேறு தந்திரங்களைக் கையாள்வது சி.சி.ரி. ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காகப் பொருட்களைப் பதுக்குதல், குறைந்த வருமானம் கொண்ட நுகர்வோரைக் குறிவைத்து மலிவான சிகரெட்டுகளின் சந்தை நிலவரத்தைத் தக்கவைத்தல், கொள்கை வகுப்பாளர்களிடம் தங்களுக்குச் சாதகமாகச் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற 8 முக்கிய வழிமுறைகளின் கீழ் புகையிலை நிறுவனங்கள் அரசின் கொள்கைகளில் தலையீடு செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களை வெறும் காகித அளவில் மட்டுமன்றி, களத்தில் மிகவும் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆய்வுக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய வடிவங்களில் வரும் மின் சிகரெட் மற்றும் நிகோடின் தயாரிப்புகளை முற்றாகக் கட்டுப்படுத்தும் வகையில் தேசிய மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை சட்டத்தில் புதிய திருத்தங்கள் அவசரமாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், சில்லறை விற்பனைக்கான உரிமங்களை முறைப்படுத்துவதோடு கடைகள் மற்றும் இணையத்தளங்கள் மீதான கண்காணிப்பு வழிமுறைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Posts

பயங்கரவாதத் தடைச் சட்டம்விரைவில் முற்றாக நீக்கப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம்விரைவில் முற்றாக நீக்கப்படும்!

by selvan
June 9, 2026
0

"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம்...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

by selvan
June 9, 2026
0

இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது....

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

by selvan
June 9, 2026
0

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும்,...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

by selvan
June 9, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது....

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

by selvan
June 9, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

by selvan
June 9, 2026
0

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த...

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

by selvan
June 9, 2026
0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்ட விதிகளின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான விசேட தீர்மானம், நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து 128...

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

by selvan
June 9, 2026
0

"அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே தற்பொழுது நடத்தப்பட்டு வரும் விதம் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே, அவருக்கு எதிராக...

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

by selvan
June 9, 2026
0

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் மற்றும் அதற்கான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அவசர...

கொழும்பில் முதன் முறையாக தேசிய சாரணர் பொசன் வலயம்

கொழும்பில் முதன் முறையாக தேசிய சாரணர் பொசன் வலயம்

by selvan
June 9, 2026
0

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பை மையமாகக் கொண்டு முதன்முறையாக நடத்தப்படவுள்ள 'தேசிய சாரணர் பொசன் வலயம்' தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி