நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா இன்று இரணைமடு குளத்தில் நடைபெற்றது.
இரணைமடு நன்னீர் மீனவ சங்க தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியாவில் உள்ள Norwegian Embassy in New Delhi (நோர்வே தூதரகம்) அரசியல் குழுவின் தூதரக செயலாளர் டார்மோட் நூலாண்ட் (Tormod Nuland) (Embassy Secretary) கலந்து கொண்டு குறித்த பதனிடும் நிலையத்தை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் ILO இன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் ஜோணி சிம்சன், காகில்ஸ் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஹரிதாஸ் பெர்ணாண்டோ , வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் செல்வி. செகராஜா அகல்யா, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கைலாசபிள்ளை பிரகாஸ், மாவட்ட நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜோகநாதன் நிசாந்தன், கிராம அலுவலர், மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
















