• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

Mathavi by Mathavi
May 12, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாக பெற்றுத்தர ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் இறங்க வேண்டிய நிலையைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன் தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்கள் ஊடாக விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்வதற்கு அரசாங்கம் பணத்தினை வழங்கியுள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை வழங்குவதற்கு இழுத்தடிப்புகளை செய்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இன்று மட்டு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய ஊடக சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுபோகம் விதைக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்த நிலையில் உள்ளது. 50 நாட்கள் கடந்தும் சில கமலநல சேவைகள் நிலையத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் பசளை விநியோகம் நடைபெறாமல் உள்ளது மிக வருத்தத்தினைத் தருகின்றது.

வாகரை மற்றும் ஏறாவூர் கமலநல சேவைகள் நிலையத்துக்கு தனியார் கம்பெனி மூலம் உர விநியோகம் நடைபெற வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்து அவர்களுக்குரிய பணமும் கமலநல சேவைகள் நிலையத்தினால் கடந்த மாதம் (ஏப்ரல்) வைப்பிலிடப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது.

இன்று வரை ஒவ்வொரு நாளும் நாங்களும் கமலநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் தேசிய உர செயலகம் ஆகியவற்றுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு நாளும் நாளை வரும் நாளை வரும் என்று விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றார்கள். அதாவது அந்த நிறுவனம் வந்து எங்கள் அதிகாரிகளைக் கூட ஏமாற்றுகின்றது.

நேற்று தனியார் நிறுவனத்துக்கு மூன்று லொறிகள் அனுப்பப்பட்டது. மூன்று லொறிகளில் ஒரு லொறியில் உரம் ஏற்றப்பட்டும், பிற்பகல் அந்த லொறியைத் தடுத்து அந்த லொறியின் சாவியை அந்த உரக் கம்பனி பறித்து உரம் வருவதனைத் தடை செய்துள்ளார்கள். அதன் பிற்பாடு எங்களுக்குத் தகவல் கிடைக்கப்பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய உர செயலகம், பிரதி ஆணையாளர் கமலநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு, அதன் பிற்பாடு ஒரு லொறி மாத்திரம் இரவு விடுவிக்கப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம்.

இருந்தும் வாகரை மற்றும் ஏறாவூர் கமலநல சேவைகள் நிலையத்துக்கு 327 மெட்ரிக் டன் தர வேண்டிய பசளையில் 40 மெட்ரிக் டன் மாத்திரமே தரப்பட்டுள்ளது. விதைத்து 50 நாட்கள் கடந்த நிலையில், பிறந்த குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய தாய்ப்பால் மறுக்கப்பட்டது போல் அந்தப் பயிர்களுக்கான உரம் மறுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் போது இவ்வாறான கம்பனிகளை தயவு செய்து அரசாங்கம் இழுத்து மூட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கமலநல சேவைகள் நிலையத்துக்குள் குவிந்த வண்ணமாக இருக்கின்றார்கள்.

நாங்கள் நினைக்கின்றோம் இந்த உரக் கம்பனிகள் கமலநல சேவைகள் நிலையத்துக்கான உரங்களைத் தாமதப்படுத்துவதன் மூலம், வெளியில் அவர்களால் 25 கிலோ யூரியா என்று சொல்லப்படுகின்ற கலர் அடிக்கப்பட்ட யூரியாவினை விற்பனை செய்வதற்காக இவ்வாறான சூட்சுமங்களைக் கையாளுகின்றார்களோ என சந்தேகத்தை எழுப்புகின்றது. அரச கூட்டுத்தாபனம் 853 மெட்ரிக் தொன் மாவட்டத்துக்குத் தர வேண்டி இருந்தது, அதில் 697 மெட்ரிக் தொன்னைத் தந்திருக்கின்றார்கள், மீதமுள்ள 156 மெட்ரிக் தொன் தற்போது கிடைக்க வேண்டியுள்ளது. தனியார் கம்பனியில் 2977 மெட்ரிக் தொன் தர வேண்டி இருந்தது. 2047.5 மெட்ரிக் தொன் தற்போது மாவட்டத்துக்கு வந்துள்ளது, இன்னும் 929 மெட்ரிக் தொன் தனியார் கம்பனி மாவட்டத்துக்குத் தர வேண்டி இருக்கின்றது. அதிலும் தனியார் நிறுவனம் தான் ஆகக்கூடுதலாக 287 மெட்ரிக் தொன் இன்னும் தர வேண்டியுள்ளது.

நாங்கள் ஓட வேண்டிய இடத்துக்கெல்லாம் ஓடிவிட்டோம், கதைக்க வேண்டியவர்களிடமெல்லாம் கதைத்துவிட்டோம், ஆனால் தீர்வு வராததால் ஜனாதிபதி 20ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தர இருப்பதாக அறிகின்றோம், அவருக்கு இந்தச் செய்தி போக வேண்டும். அவர் விரைவாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, வாழைச்சேனை கமலநல சேவைகள் நிலையத்துக்கு இன்னுமொரு நிறுவனத்தால் 4200 பேக் யூரியா தர வேண்டி இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விவசாய திணைக்களத்தின் சிபாரிசாக ஏக்கர் ஒன்றுக்கு யூரியா 125 கிலோவும், ரிஎஸ்பி 45 கிலோவும், எம்ஓபி 45 கிலோவுமாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இருந்தும் தற்போது முதலாம் கட்டமாகக் கமலநல சேவைகள் நிலையத்தின் ஊடாக ஏக்கர் ஒன்றுக்கு 30 தொடக்கம் 40-45 கிலோ வரையான யூரியா வழங்கப்படுகின்றது. அது உண்மையில் எமது மாவட்டத்தின் மணல் வளத்தைப் பொறுத்தவரையில் பசளை குறைந்த மண்ணாகக் காணப்படுவதால் அவர்கள் தரும் பசளை போதாமல் உள்ளது. அதனை ஆகக் குறைந்தது ஏக்கர் ஒன்றுக்கு 100 கிலோவாவது தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் தற்போது விவசாயிகளிடம் இருந்த நெல்லை வந்து தனியார் வியாபாரிகள் 6000 ரூபாய் தொடக்கம் 7000 ரூபாய் வரையான விலையிலேயே கொள்வனவு செய்கின்றார்கள். எங்களது உற்பத்திச் செலவு மிக அதிகமாகக் காணப்படுகின்றது. சிறுபோக அறுவடையைப் பொறுத்தவரையில் எங்களது உரத்துக்கான விலை, டீசல் மற்றும் விதைநெல், களை நாசினி, கிருமிநாசினி என்பன மிக அதிகமான விலையேற்றம் பெற்று காணப்படுகின்றது. அறுவடை செய்தவுடன் ஆகக் குறைந்தது நாட்டு நெல்லுக்கான விலை 150 ரூபாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் எதிர்காலத்தில் விவசாயத்தினை கைவிட வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த சிறுபோகத்தைப் பார்த்துதான் நாங்கள் எதிர்வரும் போகம் இந்த விவசாயத்தைச் செய்வதா இல்லையா என்பதைப் பற்றி தீர்மானிக்க வேண்டும். தயவு செய்து ஜனாதிபதி அவர்களிடம் நேரடியாக நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்,

மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோள். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் இறங்க வேண்டிய நிலையைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்பதையும் தயவாகக் கூறுகின்றோம்.

Related Posts

ஆபத்தான மரங்களை அகற்றி மலையகத்தை பாதுகாக்க வேண்டும்.!

ஆபத்தான மரங்களை அகற்றி மலையகத்தை பாதுகாக்க வேண்டும்.!

by Mathavi
June 7, 2026
0

மலையகத்தில் காணப்படும் ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதன் ஊடாக உயிர் ஆபத்துகளையும், பொருள் சேதங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும்,...

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!

by Mathavi
June 7, 2026
0

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி, வளலாய் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர்...

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
June 7, 2026
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு...

2028 இல் கடன் நெருக்கடி; இப்போதே தயாராகுங்கள்.!

2028 இல் கடன் நெருக்கடி; இப்போதே தயாராகுங்கள்.!

by Mathavi
June 7, 2026
0

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை நிறைவடைந்த பின்னர், 2028ஆம் ஆண்டில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பாரிய கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகளை அரசு இப்போதிலிருந்தே எடுக்க...

உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தின் 9 பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு.!

உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தின் 9 பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு.!

by Mathavi
June 7, 2026
0

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்குப் பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அதன் முதலாம் ஆண்டில் மிக உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
June 7, 2026
0

வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய தாய்...

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

by Mathavi
June 7, 2026
0

தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்கால பொருளாதார வெற்றியை, அந்தந்த நாட்டு அரசுகளால் மாத்திரம் தீர்மானித்துவிட முடியாது என்றும், பிராந்தியத்தின் தொழில்முனைவோர், வணிக சமூகம் மற்றும் முதலீட்டாளர்களே அதனைத் தீர்மானிக்கின்றார்கள்...

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!

by Mathavi
June 7, 2026
0

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் செயற்படுவோம் எனும் எண்ணக்கருவில் பெண்கள் சந்திப்பு பலத்த வரவேற்புடன் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில்...

செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!

செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!

by Mathavi
June 7, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்...

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

by Mathavi
June 7, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி