• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மட்டக்களப்பில் நடைபெற்ற தந்தை செல்வாவின் 128ஆவது ஜனன தின நிகழ்வு.!

Mathavi by Mathavi
March 31, 2026
in இலங்கை செய்திகள்., நிகழ்வுகள், மட்டக்களப்பு செய்திகள்
0
மட்டக்களப்பில் நடைபெற்ற தந்தை செல்வாவின் 128ஆவது ஜனன தின நிகழ்வு.!
Share on FacebookShare on Twitter

ஒற்றுமையெனும் விடயத்தில் ஏனைய கட்சிகளை விட தமிழ்த் தேசியக் கட்சிகள் பலமாகவுள்ளதாகவும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வுதான் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் என்பதை கஜேந்திரகுமார் உட்பட அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒற்றுமையாக ஒரு ஆவணத்தினை வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஒற்றுமையெனும் விடயத்தில் சிங்கள கட்சிகளைவிட தமிழ்த் தேசியக் கட்சிகள் பலமாகவுள்ளதாகவும் ஒற்றுமையெனும் விடயத்தில் பிரிவினையினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் சில சுயநலவாதிகள் மட்டுமே தமிழர்களுக்குள் ஒற்றுமையில்லை என கூறி தமிழ் மக்களுக்குள் பிரிவினையை காட்ட முடினைவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவராக தந்தை செல்வாவின் 128வது ஜனன தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வருமான சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை தலைவர் க.சோபனன், மகளிர் அணியின் உபதலைவியும் மாநகரசபை உறுப்பினருமான த.கௌரி உட்பட பிரதேச சபையின் தவிசாளர்கள், மாநகர சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வா தி.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் விசேடமாக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ந.புஸ்பராசாவினால் தந்தை செல்வா தொடர்பிலான சிறப்புரை நிகழ்த்தப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையும் இடம்பெற்றது.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
தந்தை செல்வா காலத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட பலர் இன்னும் இந்த மாவட்டத்தில் இருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சியில் எனது பாட்டனார் சீ.மு.இராசமாணிக்கம் ஐயா அவர்கள் தலைவராகயிருக்கும்போது தந்தை செல்வா இந்த மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டபோது இராசமாணிக்கம் ஐயா தேர்தல் பரப்புரைக்கு போகக் கூடாது எனவும் அவர்களுக்கு செருப்புமாலை போடவேண்டும் எனவும் பேசியவர்கள் எல்லாம் இன்று இந்த மாவட்டத்தில் தமிழ் தேசியவாதிகளாக பலரால் காட்டப்படுகின்றார்கள்.

ஆனால் உண்மையில் இலங்கை தமிழரசுக் கட்சியில் அந்தக்காலம் தொடக்கம் இந்த காலம் வரையில் தமிழரசுக் கட்சியையும் வளர்த்து இளைஞர் பேரவையுடன் இருந்தவர்களை கேட்டால் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்பதை எதற்காக சொன்னார் என்று அவர்களிடம் கேட்டால் தெரியும்.
நாங்கள் எமது நிலத்தை பாதுகாப்பது என்றால் ஒரு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் தமிழ் மக்களின் கைகளில் இருந்தால் மாத்திரம்தான் எமது நிலத்தினை நாங்கள் பாதுகாக்க முடியும். இல்லாதுவிட்டால் எங்காவது காணிகளை பாதுகாக்க ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தே தடுக்கவேண்டிய நிலையிருக்கின்றது.

நாங்கள் பொருளாதாரத்தினால் பலமடையும்போதே எமது இளைஞர்களை இங்கு தக்கவைக்க முடியும். இன்று இந்த நாட்டில் இளைஞர்கள் வாழக்கூடிய சூழ்நிலையில்லை. இன்று மின்சார கட்டணம் அதிகரிக்கின்றது, உலக சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் இன்று எரிபொருள் விலை அதிகரித்திருக்கின்றது. பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்ற போதிலும் அதற்கு நிகராக சம்பளம் அதிகரிக்குமா என்பதே சந்தேகமே.

நாங்கள் மாகாண சபை தேர்தலை தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கான முக்கிய காரணம். மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் ஆளுநரின் ஆளுகைக்குள் இல்லாமல் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் கீழ் மாகாண சபை இருக்கும். உள்ளூராட்சி மன்றங்களை இயங்க வைப்பதற்கு ஆளுநரோ மாகாண சபையோ தடையாக இருக்காது. அதற்காகவே மாகாணசபை தேர்தலை நடாத்துமாறு கோருகின்றோம்.

உடனடியாக பறிக்க கூடிய பழமாக மாகாண சபையும் ஏணிவைத்து ஏறி நாங்கள் பறிக்ககூடிய பழமாக புதிய அரசியலமைப்பு இருக்கும். அதனை நாங்கள் முன்னெடுப்போம். மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதாக இருந்தால் நாங்கள் எங்களது நீண்டகால இலக்கான புதிய அரசியலமைப்பினை அடைந்தால் மாத்திரம்தான் அதனை செய்யமுடியும்.

ஒற்றுமையை பற்றி பேசும்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் உறுதியாகயிருந்தார்கள். வட்டாரங்களில் பங்காளிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காத நிலைமைகள் காணப்பட்டன. தவிசாளர், பிரதி தவிசாளர்கள் பங்காளிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்க முடியாத நிலைமைகள் காணப்பட்டன. பிரிந்துகேட்டபோதும் வடக்கில் பல இடங்களில் இணைந்து ஆட்சியமைத்தோம்.

இன்று ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கூறுகின்ற சிலர் மறுபுறத்தல் இவர்தான் ஒட்டுக்குழுக்களை இணைக்கின்றார். இவர்தான் மீண்டும் ஒட்டுக் குழுக்களுடன் பயணிக்கப் பார்க்கின்றார் என்று கூறிவருகின்றனர். தங்களுக்கு தங்களுக்கு தேவை வரும் போது சேர்ந்து இயங்க வேண்டும், தங்களுக்கு தேவையில்லாத போது சேர்ந்து செயற்படக்கூடாது.

Related Posts

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று...

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

by Mathavi
May 21, 2026
0

மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச...

பொலிஸ் பரிசோதகர் சுட்டுக் கொ*லை; உந்துருளி ஓட்டுநர் கைது.!

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 21, 2026
0

கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்...

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!

by Mathavi
May 21, 2026
0

போக்குவரத்து சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்தவும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதை நோக்காகவும் கொண்டு வங்களாவடி நகர்ப் பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பது அவசியம் என சபையின் வேலணைப் பிரதேச சபையின்...

மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!

மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!

by Mathavi
May 21, 2026
0

மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (20) குரல் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின்...

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

by Mathavi
May 21, 2026
0

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட...

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (21)...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கால்வாயில் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 21, 2026
0

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாகப் உஹன...

குப்பைகளால் நிரம்பியுள்ள கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி; மக்கள் அவதி.!

குப்பைகளால் நிரம்பியுள்ள கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி; மக்கள் அவதி.!

by Mathavi
May 21, 2026
0

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி குப்பைகளால் நிரம்பி காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணியில் போடப்படும் குப்பையினால் வீதியின்...

மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் மு/ வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை.!

மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் மு/ வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை.!

by Mathavi
May 21, 2026
0

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி மொத்தமாக 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி