துரைவியின் 95 ஆவது பிறந்த தின நினைவுப் பேருரையும், துரை மற்றும் ஜெயம் விருது வழங்கல் நிகழ்வும் கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் முன்னாள் அமைச்சின் செயலாளர் எம். வாமதேவன் தலைமையில் நேற்று முன்தினம்(29) நடைபெற்றது.
இந்நிகழ்வின் தொகுப்புரையையும், வரவேற்புரையையும் மேமன்கவி நிகழ்த்தினார்.
இதன்போது ந. இரவீந்திரன் எழுதிய “தமிழ்ப் பண்பாடு ஊற்றுகளும் ஓட்டங்களும்” என்ற ஆய்வு நூலுக்கும், இரா.சடகோபன் எழுதிய “சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு” என்ற ஆய்வு நூலுக்கும் ராஜன் ஹூல் – ஆங்கிலத்தில் எழுதிய “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” ‘(மறைகரம் வெளிப்பட்டபோது)’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்த என்.எம். அமீனின் மொழிபெயர்ப்பு நூலுக்கும் துரைவி விருதுகள் வழங்கப்பட்டன.
பெண் ஊடகவியலாளர் நாகபூசணி கருப்பையாவுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான “ஜெயம் விருது” வழங்கப்பட்டது.
துரைவி 95 ஆவது பிறந்த தின நினைவுப் பேருரையை ”பாலின சமத்துவத்தை நசுக்கும் இரட்டைச் சுமை பெண்ணிய உரையாடல்” என்ற தலைப்பில் எழுத்தாளர் பிரமீளா பிரதீபன் நிகழ்த்தினார்.
நிகழ்வில் நன்றியுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் வழங்கினார்.
இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் பி. தேவராஜ் மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் எம். வாமதேவன் ஆகியோர் விருதுகளை வழங்கி வைத்தனர்.










