யாழ்ப்பாணம் வடமராட்சி காரணவாய் கரணையம்பதி சனசமூக நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று காலை 9:00 மணியளவில் கருணையம்பதி சன சமூக நிலைய தலைவர் தனபாலசிங்கம் செல்வகுமார் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றதை தொடர்ந்து தலைமை உரை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா அவர்கள் சிறப்புரை நிகழ்தினார்.
அதனை தொடர்ந்து கருணையம்பதி சமூகத்தால் துணை வேந்தர், திருமதி துணை வேந்தர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
புலம்பெயர்ந்த கருணையம்பதி வாழ் உறவுகளின் நிதி பங்களிப்பில் புனரமைக்கப்பட்ட கருணையம்பதி சனசமூக நிலைய திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர், வவுனியா மாவட்ட சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர், நாகலிங்கம் கமலதாசன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திர சிகிக்சை நிபுணர் கந்தசாமி உமாசங்கர், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன், உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி முன்னாள் அதிபர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம், யா/கரணவாய் தாமோதரா வித்தியாலய அதிபர் ஆனந்தராசா விமலராஜா மற்றும் கிராமசேவகர், கிராம மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.














