கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4 ஆவது சுற்றில் கஜகஸ்தானை சேர்ந்த 23 ஆவது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர் கொண்டார்.
இதில் சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 21 நிமிட நேரமே தேவைப்பட்டது.
மற்ற 4 ஆவது சுற்று ஆட்டங்களில் 8 ஆவது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாவுர் ( ஆஸ்திரேலியா), 10 ஆம் நிலை வீரர் லாரென்சோ முசெட்டி ( இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதியில் நுழைந்தனர்.
15 ஆவது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷ்யா) அதிர்ச்சிகரமாக தோற்றார். கனடாவை சேர்ந்த 25 ஆம் நிலை வீரரான பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 7-5, 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.
8 ஆம் நிலை வீராங்கனை அமண்டா அனிஸ்மோவாவும் ( அமெரிக்கா) காலிறுதிக்கு தகுதி பெற்றார். அவர் காலிறுதியில் ஸ்வியாடெக்குடன் மோதுகிறார்.










