• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, November 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

2009 இல் படையினரிடம் சரணடைந்தோரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுங்கள்!

Thamil by Thamil
September 1, 2025
in இலங்கை செய்திகள்.
0
2009 இல் படையினரிடம் சரணடைந்தோரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுங்கள்!
Share on FacebookShare on Twitter

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சரணடைந்த சகலரது பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட வேண்டும் எனவும், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான முறையான செயற்திட்டம் அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் வரை, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெற்கைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வலியுறுத்தியுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு சமூக செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோவின் தலைமையில் தெற்கைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (29) கையளித்தனர்.

அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, “வலிந்து காணாமலாக்கப்பட்டவர் திருமணமானவர் எனின் அவரது குடும்பத்துக்கு 50,000 ரூபாவும், இளைஞர் எனின் 25,000 ரூபாவும், மாணவர் எனின் 15,000 ரூபாவும் மாவட்ட செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு இந்த நிவாரணக்கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை.

அதேபோன்று 2019 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட வரவு, செலவுத் திட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் 2019 நவம்பர் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அக்கொடுப்பனவு 153 குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருந்ததுடன் அதற்காக வெறுமனே 7 மில்லியன் ரூபா நிதி மாத்திரமே செலவிடப்பட்டிருந்தது.

அதேவேளை 2022 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு தலா 100,000 ரூபாவை இறுதிக் கொடுப்பனவாக செலுத்துமாறு அமைச்சரவையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. ஆனால் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் உள்ளடங்கலாக பல அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அதனை இறுதிக் கொடுப்பனவாக ஏற்பதற்கு மறுத்ததன் காரணமாக, அது தற்காலிக நிவாரணக் கொடுப்பனவு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அத்தோடு இந்தத் தொகை போதுமானது அல்ல என்பதனால், அதனை 200,000 ரூபாவாக அதிகரிப்பதாக 2022 ஒக்டோபர் 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இதற்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், 800 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டிருக்கிறது. இந்நிதியின் ஊடாக 5000 குடும்பங்கள் பயனடைந்திருக்க முடியும் என்றாலும் கூட, சுமார் 4000 குடும்பங்கள் மாத்திரமே அக்கொடுப்பனவைப் பெற்றிருக்கின்றன.

இவ்வாண்டு வரவு, செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின்கீழ் எந்தவொரு குடும்பமும் கொடுப்பனவைப் பெறவில்லை. இந்நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா அடுத்துவரும் 4 மாதங்களில் உரியவாறு பயன்படுத்தப்படாவிடின், அந்நிதி மீண்டும் திறைசேரியை சென்றடையும். இந்நிதியின் ஊடாக 5000 குடும்பங்கள் பயனடைந்திருக்கக்கூடும் எனினும், அவ்வுரிமையை தற்போதைய அரசாங்கம் இவ்வாண்டு முழுவதும் மறுத்திருக்கிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் நிலையாகக் கட்டமைக்கப்பட்ட இழப்பீடு வழங்கலுக்கு உரித்துடையவர்கள் என அரசாங்கம் தீர்மானமொன்றை மேற்கொள்ளவேண்டும்.

எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் தற்போது நடைமுறையில் உள்ள 200,000 ரூபா தற்காலிக கொடுப்பனவு சகல குடும்பங்களுக்கும் வழங்கப்படவேண்டும். 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சரணடைந்த சகலரது பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படவேண்டும்.

நாட்டில் கண்டறியப்பட்ட சகல மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதி வளங்களை ஒதுக்கீடு செய்து பெற்றுக்கொள்வதுடன், இவ்விவகாரத்தில் சர்வதேசத்திடம் அவசியமான உதவிகளை நாடவேண்டும். வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான முறையான செயற்திட்டம் அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் வரை, ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படவேண்டும். மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்” என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

by Thamil
November 12, 2025
0

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய தினம் (12.11.2025) பிரதேச...

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

by Thamil
November 12, 2025
0

"தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாச்சார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று (12)...

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

by Thamil
November 12, 2025
0

'தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து சிறுபான்மை இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்'...

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

by Thamil
November 12, 2025
0

'சட்டத்தை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மாற்ற முடியாத நிலையில் ஒரு சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆவண காப்பகம் முக்கியமானது' என சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல்...

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

by Thamil
November 12, 2025
0

யாழ்ப்பாணம், சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், மற்றையவரிடமிருந்து...

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!

by Thamil
November 12, 2025
0

"இலங்கையில் பொறுப்புக்கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம், சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம்" என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார். கடந்த...

வவுனியா – பேராறு நீர்த்தேக்க மீன்களை உண்பதை உடன் தவிர்க்கவும்!

வவுனியா – பேராறு நீர்த்தேக்க மீன்களை உண்பதை உடன் தவிர்க்கவும்!

by Thamil
November 12, 2025
0

பேராறு நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறும், அந்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைத் தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பேராறு...

போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸ் ஈடுபடவில்லையாம்!

போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸ் ஈடுபடவில்லையாம்!

by Thamil
November 12, 2025
0

"வடக்கு மாகாணத்தில் போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்" என பாதுகாப்பு பிரதி அமைச்சர்...

மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித் தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்!

மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித் தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்!

by Thamil
November 12, 2025
0

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சமகாலத்தில் சந்தித்து வருகின்றது. அதனால் 7 ஆயிரம் கரையோர குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள்....

நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு; ஒப்புக்கொண்ட சந்திரசேகர்!

நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு; ஒப்புக்கொண்ட சந்திரசேகர்!

by Thamil
November 12, 2025
0

"வடக்கு மாகாணத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரிக்க இராணுவத்தினர்தான் பிரதான காரணம். பொலிஸாரும் அதற்கு உடந்தையாக செயற்படுகின்றார்கள்" என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி