• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, November 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமியுங்கள்!

Thamil by Thamil
September 1, 2025
in இலங்கை செய்திகள்.
0
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமியுங்கள்!
Share on FacebookShare on Twitter

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கும் அதேவேளை, நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு, தண்டனையிலிருந்து விலக்கு மற்றும் நீதிக்கான தடைகள் ஆகியவற்றின் நீண்ட வரலாற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்குமாறு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.லீலாதேவி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வலியுறுத்தியுள்ளார்.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு லீலாதேவி அனுப்பி வைத்திருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, “இலங்கை அரச படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களாகிய நாங்கள், இந்நாளில் உங்களது உடனடிக் கவனத்தையும், தீர்க்கமான நடவடிக்கையையும் கோரி மீண்டும் ஒருமுறை உங்களுக்கு கோரிக்கை முன்வைக்கிறோம்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் என்ற ரீதியில், தொடர்ந்து 3000 நாட்களுக்கும் மேலாக நாங்கள் இடைவிடாமல் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கைகள் இன்னமும் மாற்றமின்றித் தொடர்கின்றன. காணாமலாக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச நீதிப்பொறிமுறையை நிறுவவேண்டும் எனவும், எதிர்வருங்காலத்தில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு சர்வதேச மேற்பார்வை அவசியம் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

உலகைப் பொறுத்தமட்டில், வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் என்பது ஒரு நினைவு நாளாகும். ஆனால் எம்மைப் பொறுத்தவரை, நீதியின்றி நினைவுகூருதல் என்பது எமது வலியை மேலும் ஆழப்படுத்துகிறது. இந்தத் தினம் வெறும் அடையாளமாக மாத்திரம் இருக்குமா? அல்லது இது உண்மையான பொறுப்புக்கூறலுக்கு வலுச்சேர்க்குமா என்பதை சர்வதேச சமூகம் தான் தீர்மானிக்கவேண்டும்.

இலங்கையில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பது தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பின் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1958 ஆம் ஆண்டு படுகொலைகள் முதல் 2009 ஆம் ஆண்டு போரின் கொடூரமான இறுதிக் கட்டங்கள் வரையான சம்பவங்கள் மற்றும் இன்று வரை தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்பவற்றுக்குக் காரணமான குற்றவாளிகளும், அதனை இயக்கிய இலங்கை அரசாங்கப் பொறிமுறைகளும் படுகொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பவற்றுக்கு இன்னமும் பொறுப்புக்கூறாமல் தப்பித்து வருகின்றன.

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எமது தொடர் கவனயீர்ப்புப் போரட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் பலர் பதில்களின்றி இறந்துவிட்டனர். நாங்கள் தொடர்ந்து போராடுபவர்கள் மாத்திரமல்ல. மாறாக நாங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சிகளும் என்பதால் இடைவிடாமல் மனவுறுதியுடன் போராடி வருகிறோம். நாம் கோருவது வெறும் உத்தரவாதங்களை அல்ல. மாறாக உரிய நடவடிக்கைகளையே நாம் கோருகிறோம்.

அண்மையில் நடைபெற்ற யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு சொந்தமானவை உள்ளடங்கலாக இதுவரை 167 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி சிறுவர்களின் பாடசாலை புத்தகப்பை, ஆடைகள், பால் போத்தல், பொம்மைகள் போன்ற பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு வட, கிழக்கு எங்கிலும் பல மனிதப் புதைகுழிகள் இருக்கும் என அஞ்சுகிறோம்.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழிகளில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும் அதனை அகழ்வதன் ஊடாக மாத்திரம் நீதியைப் பெறமுடியாது. குற்றவாளிகள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பலவீனமானது, அரசியல் மயமாக்கப்பட்டது மற்றும் செயற்திறனற்றது என்பது நிரூபனமாகியுள்ளது. அதனூடாக உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை. ஒரு அரசினால் தமது குற்றங்களை நம்பகத்தன்மையுடன் விசாரிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். உள்நாட்டுப் பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டன என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும். பாரபட்சமற்றதொரு சர்வதேச பொறிமுறையால் மாத்திரமே நீதியை வழங்கமுடியாது.

எனவே எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு வலியுறுத்துகிறோம். அத்தோடு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு, தண்டனையிலிருந்து விலக்கு மற்றும் நீதிக்கான தடைகள் ஆகியவற்றின் நீண்ட வரலாற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

Related Posts

முகநூல் அரசியலுக்கும், விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்!

முகநூல் அரசியலுக்கும், விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்!

by Thamil
November 18, 2025
0

"மலையகத்தில் முகநூல் அரசியலுக்கும், உண்மைக்கு புறம்பான விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து உண்மையான சேவையின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்து எதிர்காலத்தை வழிநடத்துவோம்" என தொழிலாளர் தேசிய சங்கத்தின்...

முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியமும் இரத்து!

முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியமும் இரத்து!

by Thamil
November 18, 2025
0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச...

மஹிந்தவை சந்தித்த இந்திய துணைத் தூதுவர்!

மஹிந்தவை சந்தித்த இந்திய துணைத் தூதுவர்!

by Thamil
November 18, 2025
0

இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று...

மறைந்த தென் மாகாண ஆளுநருக்கு அஞ்சலி செலுத்திய வடக்கு ஆளுநர்!

மறைந்த தென் மாகாண ஆளுநருக்கு அஞ்சலி செலுத்திய வடக்கு ஆளுநர்!

by Thamil
November 18, 2025
0

மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (18) செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினார். தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர...

அரசுக்கு எதிரான நுகேகொடை பேரணி; ரவிக்கு இன்னும் அழைப்பு வரவில்லையாம்!

அரசுக்கு எதிரான நுகேகொடை பேரணி; ரவிக்கு இன்னும் அழைப்பு வரவில்லையாம்!

by Thamil
November 18, 2025
0

"அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு தனக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த...

ஒன்பது மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

ஒன்பது மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

by Thamil
November 18, 2025
0

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு...

ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது!

ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது!

by Thamil
November 18, 2025
0

தென்னிலங்கையில் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) செவ்வாய்க்கிழமை கைது...

புத்தர் சிலை விவகாரத்திற்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் குழு வேண்டும்!

புத்தர் சிலை விவகாரத்திற்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் குழு வேண்டும்!

by Thamil
November 18, 2025
0

"திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தம்பதியினர் சுட்டுக்கொ*லை; தங்காலையில் பயங்கரம்!

தம்பதியினர் சுட்டுக்கொ*லை; தங்காலையில் பயங்கரம்!

by Thamil
November 18, 2025
0

அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று மாலை 6.15 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ....

இனவாதத் தீயை மூட்ட இனியும் இடமளியோம்!

இனவாதத் தீயை மூட்ட இனியும் இடமளியோம்!

by Thamil
November 18, 2025
0

"இலங்கையில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு நான் மட்டுமல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள். திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி