• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, November 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மனித உரிமைகள்சார் கரிசனைகளை ஐ.நா.வில் முன்வைப்பது பாதிக்கப்பட்ட தரப்பின் உரிமை!

Thamil by Thamil
September 1, 2025
in இலங்கை செய்திகள்.
0
மனித உரிமைகள்சார் கரிசனைகளை ஐ.நா.வில் முன்வைப்பது பாதிக்கப்பட்ட தரப்பின் உரிமை!
Share on FacebookShare on Twitter

மனித உரிமைசார் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கரிசனைகளை முன்வைப்பது பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சிவில் சமூகத்தின் உரிமை என்பதை அமைச்சர் பிமல் ரத்நாயக்க புரிந்து கொள்ளவேண்டும். அதனை ‘நாடகம்’ எனக் கூறுவது இன்றளவிலே பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகள் குறித்து கவனம் செலுத்தும் ஒரு கட்டமைப்பை தாழ்த்தும் வகையில் அமைந்திருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா முகவரகத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “யுத்தத்தினால் மரணித்தோர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் சில சந்தர்ப்பங்களில் அநாவசிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

நான் பல தடவைகள் மனிதப் புதைகுழிகளைச் சென்று பார்வையிட்டிருக்கிறேன். உதாரணமாக கடந்த மே மாதம் நான் செம்மணி மனிதப் புதைகுழியைச் சென்று பார்வையிட்டபோது, அங்கு ஒரு காவலர் கூட இருக்கவில்லை. ஆனால் செப்டெம்பர் மாதம் நெருங்கும்போது இவ்விடயங்கள் பூதாகரமாக்கப்படுவதைப் பார்க்கின்றோம். குறுகிய அரசியல் நோக்கிலான இவ்வாறான செயற்பாடுகளை மக்களே புறக்கணிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது அக்கருத்தை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில் அம்பிகா சற்குணநாதன் மேலும் கூறியிருப்பதாவது, “வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (29) அலரி மாளிகையில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரைக் குறிக்கும் வகையில் ‘செப்டெம்பர் நெருங்குகையில் நாடகங்கள் ஆரம்பமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பயன்படுத்தி அரங்கேறும் அவ்வாறான நாடகங்களை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அவர் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடச் சென்றபோது, அதன் வாயிலில் ஒரு காவலாளி கூட இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மனிதப் புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை என்பதையும், அவர் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதையும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அதேபோன்று மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கரிசனைகளை முன்வைப்பது பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சிவில் சமூகத்தின் உரிமை என்பதை அமைச்சர் புரிந்து கொள்ளவேண்டும். அதனை ‘நாடகம்’ எனக் கூறுவது இன்றளவிலே பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகள் குறித்து கவனம் செலுத்தும் ஒரு கட்டமைப்பை தாழ்த்துவதாகவே அமைந்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி செம்மணி விவகாரம் குறித்து தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வந்திருக்கிறது. அவ்வாறிருக்கையில் பேரவைக் கூட்டத்தொடர் நெருங்குகையில் மாத்திரம் பாதிக்கப்பட்ட தரப்பினர் இவ்விவகாரம் பற்றிப் பேசுவதாகவும், அத்தரப்பினர் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணம் எனவும் கூறுவதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினர் வெறும் தலையாட்டி பொம்மைகள் போல சித்தரிக்கப்படுகிறார்கள்.

அடுத்ததாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஓர் சுயாதீன கட்டமைப்பாகவே இயங்கவேண்டும். ஆனால் அதன் சுயாதீனத்தன்மை குறித்து ஏற்கனவே சந்தேகங்கள் நிலவும்போது, அலரி மாளிகையில் நிகழ்வொன்றை நடாத்துவதானது அச்சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தும். சுயாதீனத்துவம் எனும்போது அரசாங்கத்திடமிருந்து எவ்வித அறிவுறுத்தல்களோ, ஒப்புதல்களோ அல்லது அழுத்தங்களோ இன்றி காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் தீர்மானங்களை சுயமாக மேற்கொள்ளவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

by Thamil
November 12, 2025
0

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய தினம் (12.11.2025) பிரதேச...

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

by Thamil
November 12, 2025
0

"தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாச்சார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று (12)...

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

by Thamil
November 12, 2025
0

'தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து சிறுபான்மை இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்'...

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

by Thamil
November 12, 2025
0

'சட்டத்தை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மாற்ற முடியாத நிலையில் ஒரு சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆவண காப்பகம் முக்கியமானது' என சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல்...

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

by Thamil
November 12, 2025
0

யாழ்ப்பாணம், சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், மற்றையவரிடமிருந்து...

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!

by Thamil
November 12, 2025
0

"இலங்கையில் பொறுப்புக்கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம், சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம்" என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார். கடந்த...

வவுனியா – பேராறு நீர்த்தேக்க மீன்களை உண்பதை உடன் தவிர்க்கவும்!

வவுனியா – பேராறு நீர்த்தேக்க மீன்களை உண்பதை உடன் தவிர்க்கவும்!

by Thamil
November 12, 2025
0

பேராறு நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறும், அந்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைத் தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பேராறு...

போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸ் ஈடுபடவில்லையாம்!

போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸ் ஈடுபடவில்லையாம்!

by Thamil
November 12, 2025
0

"வடக்கு மாகாணத்தில் போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்" என பாதுகாப்பு பிரதி அமைச்சர்...

மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித் தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்!

மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித் தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்!

by Thamil
November 12, 2025
0

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சமகாலத்தில் சந்தித்து வருகின்றது. அதனால் 7 ஆயிரம் கரையோர குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள்....

நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு; ஒப்புக்கொண்ட சந்திரசேகர்!

நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு; ஒப்புக்கொண்ட சந்திரசேகர்!

by Thamil
November 12, 2025
0

"வடக்கு மாகாணத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரிக்க இராணுவத்தினர்தான் பிரதான காரணம். பொலிஸாரும் அதற்கு உடந்தையாக செயற்படுகின்றார்கள்" என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி