• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, November 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நிதி ஒதுக்கீடுகளை முறையாக நிறைவு செய்து மக்களுக்கு நன்மைகளை வழங்குவது அவசியம்..!

Thamil by Thamil
August 15, 2025
in இலங்கை செய்திகள்.
0
நிதி ஒதுக்கீடுகளை முறையாக நிறைவு செய்து மக்களுக்கு நன்மைகளை வழங்குவது அவசியம்..!
Share on FacebookShare on Twitter

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பான 2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் பயன்பாடு குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டு தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் இன்று (15) இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள 8 நிறுவனங்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அது தொடர்பான திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டது.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை உட்பட அனைத்து துறைகளின் முன்னேற்றத்திற்காக முறையான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாததே இதுவரை காணப்பட்ட பிரச்சினை என்றும், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அனைத்துத் துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவை முறையாக குறித்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது தொடர்பில் திருப்தியடைய முடியாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அந்த நிதி ஒதுக்கீடுகளை உரிய நிதியாண்டிற்குள் முறையாக நிறைவு செய்து மக்களுக்கு நன்மைகளை வழங்குவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குதல், விளையாட்டுடன் தொடர்புள்ள உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், சர்வதேச அளவில் திறமையான வீரர்களை அடையாளம் காணும் திட்டங்களை செயற்படுத்துதல் மற்றும் வீரர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தினார்.

இதன்போது விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான திட்டத்தைத் தயாரிக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் விளையாட்டு சங்கங்களின் அதிகபட்ச பங்களிப்பைப் பெறவும், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அறிவுறுத்தினார்.

இந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்வது விளையாட்டு வளர்ச்சிக்கு மட்டுமன்றி, நாட்டின் ஆரோக்கியம், சமூக நலன், குற்றங்களைக் குறைத்தல், போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்டல், கூட்டு முயற்சியை உருவாக்குதல் மற்றும் துடிப்பான தொழிற்படையை உருவாக்குதல் போன்ற பல நோக்கங்களை ஒரே நேரத்தில் அடையும் முதலீடாகும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

விளையாட்டுத்துறையில் ஆற்றல் மட்டும் போதாது என்றும், இந்த யுகத்தில் பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் மிக முக்கியமான காரணிகளாகும் என்றும் வீரர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை வழங்குவது விளையாட்டு அமைச்சின் முன்னுரிமைப் பணியாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

தற்பொழுது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ள சுகததாஸ விளையாட்டரங்கு, கிளிநொச்சி மற்றும் மன்னார் உட்பட நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விளையாட்டு அரங்குகளின் புதுப்பித்தல் மற்றும் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விளையாட்டு தொடர்பான உட்கட்டமைப்பு மேம்பாட்டில் விசேட கட்டுமானங்களுக்கு நிபுணத்துவ அறிவுள்ளவர்களை பணியமர்த்துதல், இந்த நோக்கத்திற்காக அரசாங்க தரப்பில் ஒரு ஆலோசனை நிறுவனத்தை நிறுவுதல் மற்றும் சர்வதேச அளவிலான ஆலோசனை சேவைகளைப் பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்பட்டது.

பாடசாலை விளையாட்டு அபிவிருத்தியில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதற்காகத் தேவையான நிதியை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேற்படி அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு, விளையாட்டு மேம்பாட்டிற்கான புதிய விரிவான திட்டத்தை விரைவில் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அண்மையில் நடைபெற்ற 2025 தேசிய இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற இளைஞர்களின் பங்கேற்புடன் இளைஞர் விவகார அமைச்சினால் செயற்படுத்தப்படவுள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, சுகத் திலகரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபொன்சு, கபில ஜனக பண்டார மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

Related Posts

‘பட்ஜட்’ வாக்கெடுப்பு தொடர்பில் முடிவெடுக்க ஒன்றுகூடும் தமிழரசு.!

‘பட்ஜட்’ வாக்கெடுப்பு தொடர்பில் முடிவெடுக்க ஒன்றுகூடும் தமிழரசு.!

by Mathavi
November 13, 2025
0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இன்று வியாழக்கிழமை மாலை இணைய வழியில் ஒன்றுகூடி கலந்துரையாட இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் அநுர அரசு சமர்ப்பித்துள்ள வரவு...

சங்குக் கூட்டணியுடன் பேச தமிழரசு அழைப்பு.!

சங்குக் கூட்டணியுடன் பேச தமிழரசு அழைப்பு.!

by Mathavi
November 13, 2025
0

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்திற்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

பட்ஜட் தொடர்பில் அரசுக்கு நாளை முதல் பலப்பரீட்சை.!

பட்ஜட் தொடர்பில் அரசுக்கு நாளை முதல் பலப்பரீட்சை.!

by Mathavi
November 13, 2025
0

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி...

அநுர அரசின் பயணம் சிறப்பு.!

அநுர அரசின் பயணம் சிறப்பு.!

by Mathavi
November 13, 2025
0

"இலங்கையில் கடந்த கால அரசுகள் பயணித்ததைவிட தற்போதைய அரசின் பயணம் சிறப்பாக உள்ளது." - இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்....

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

by Thamil
November 12, 2025
0

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய தினம் (12.11.2025) பிரதேச...

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

by Thamil
November 12, 2025
0

"தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாச்சார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று (12)...

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

by Thamil
November 12, 2025
0

'தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து சிறுபான்மை இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்'...

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

by Thamil
November 12, 2025
0

'சட்டத்தை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மாற்ற முடியாத நிலையில் ஒரு சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆவண காப்பகம் முக்கியமானது' என சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல்...

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

by Thamil
November 12, 2025
0

யாழ்ப்பாணம், சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், மற்றையவரிடமிருந்து...

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!

by Thamil
November 12, 2025
0

"இலங்கையில் பொறுப்புக்கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம், சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம்" என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார். கடந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி