• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, November 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வாசகர் பக்கம்

கொல்லப்பட்ட எங்களது வாக்குமூலம்..!

Thamil by Thamil
August 15, 2025
in வாசகர் பக்கம்
0
கொல்லப்பட்ட எங்களது வாக்குமூலம்..!
Share on FacebookShare on Twitter

கவிஞரும், எழுத்தாளரும், விரிவுரையாளருமான திரு. மேகராசா அண்ணனைப் பற்றி தனிப்பட்டரீதியில் சொல்வதாயின் அவர்கள் எனது மரியாதைக்கும், அன்புக்கும் நெருக்கமானவர். சிறிதுகாலப் பழக்கம் என்றாலும் நானும், அவரும் பிறந்த இடம் மட்டக்களப்பின் அரசடித்தீவு பிரதேசம் என்பதால் பிறப்பாலும் ஒரு மண்வாசனை எம்மை ஈர்க்குறது என்றே கூற வேண்டும்.

எழுத்து உலகத்துள்ளும், வாசிப்பு உலகத்துள்ளும் எனக்கு பல ஆலோசனை வழிகாட்டுதல்களை அழைக்கும் போதெல்லாம் சலிக்காது கூறுவார்.

நூல் பற்றிக் கூறுகையில், தனது முன்னைய நூல்களை விட அதிக ஊர் வாசம் மணக்குகிற சொல்லாடல்களையே இதில் பயன்படுத்தி உள்ளார். தமிழ் சமூகத்தின் மீதான அழித்தொழிப்பு, இரத்த வாடை, கொடுமை போன்ற சமூக நோக்கையும் பதிவு செய்ய அவர் தவறவில்லை எனலாம்.

தனது ஊர் படுவாங்கரை பகுதியைச் சேர்ந்ததை மெருகூட்டி அன்பும், செழிப்பும் மணக்க மணக்க கவிதையை சமைத்து வைத்துள்ளார். விரும்பியவர்கள் உண்டு மனமகிழலாம். மேரா என்ற சுருக்கப் பெயரோடு தொடர்ந்து எழுதும் அண்ணனின் கவிதைகளின் வீச்சை இதில் சில காட்டும்.

வாழ்க எம் படுவான்கரையே எனும் தலைப்பில்……

“நீண்ட வாவி படுத்திருக்கும்
அதன் மேற்கே நீ
படுவான்கரையென எழுந்தாய்

உழவே தலையெனக் கொண்ட
உழவோரின் முயற்சி பலித்திட
முற்றித்திரண்ட கதிர்மணிகள்
கூத்தும் கரகமும் ஆடி
கும்மி கொட்டி மகிழ்வுகொள்
கிழட்டு பெருநிலமே நீ
ஓர்மத்தோடு என்றும் நில்

திரண்டெழுந்த பகையை
அன்று
நின்றே வெறியாடிய நீ
கொடுங்கோல் எழும் காலத்தே இன்று
பீரங்கியாய் நிமிர்ந்து நில்.

களமாடிய வீரரின்
மறம் நிகர்த்து
குடும்பிமலையில் ஏறி நின்று
அடிக்கடி சிலிர்த்துக்கொள்.”

உங்களால் கொல்லப்பட்டோம் எனும் தலைப்பில்…….

“வானும் நிலனும்
ஆயிரம் கண்களும் பிறவும்
சாட்சியாக
உங்களால் கொல்லப்பட்டோம்

உடல் ஒளித்தல்
மானமெனக் கொண்ட எம்மை
நிர்வாணப்படுத்தியதும்
வன்புணர்வுக்குட்படுத்தியதும் தான்
உம் போர் வெற்றி

உங்கள்
அக்காவை
அம்மாவை
சகோதரியை
நிர்வாணப்படுத்தியும்
குறிகளைச் செலுத்தி சிதைத்தும் தான்
தெருக்களில் பரணி பாடினீர் “

ஊரப்பா எனும் தலைப்பில்……

“பூழை வழிந்த கண்கள்
ஊத்தை விளையாடி மகிழ்ந்த கால்கள்
அவரை கண்டதும் புனிதம் பெறும்
பனைமரக்கருக்கு கிழித்த முட்டி வயிறு
பொத்தானை விரும்பாத
ஆடையை உடனே நேசிக்கும்

ஊரப்பா என்னைத் தூக்கிக் கொஞ்சுவார்
மீசையோடு வெத்திலாக்கு வாயும்
கன்னத்தில் முத்தம் கொடுக்கும்
சாராய நாற்றம் மூக்கில் பீச்சும் “

2020 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் கிராமத்து சொற்கள் பலவற்றை சுமந்து செல்வது கிராமவாசியான எனது மனதிற்கு மறைமுகமாக ஆனந்தம் தந்தது எனலாம்.

நீண்ட காலம் இடைவெளி இல்லாது தொடர்ந்தும் அண்ணனின் எழுத்து வாசகர் உள்ளத்தை தாலாட்ட வேண்டும் என்பதே எனது பெரும் அவா..!

நன்றி

எழுத்தாளர்,
விமர்சகர்
ஆதன் குணா

Related Posts

தமிழ்ப் பெயர்கள்!

தமிழ்ப் பெயர்கள்!

by Thamil
November 7, 2025
0

சிறிதளவேனும் வேற்று மொழிகளின் கலப்படமின்றி ஆரம்பகால தமிழர்கள் தமது குழந்தைச் செல்வங்களுக்கு ஆகச் செறிந்த கருத்து பொதிந்த தமிழ்ப் பெயர்களை வைத்தார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களில்...

வாசலிலே கிருசாந்தி!

வாசலிலே கிருசாந்தி!

by Thamil
November 1, 2025
0

எழுபது ஆண்டு கால தாகத்தில் எண்ணற்ற அழிவுகளும், சிதைவுகளும் தமிழினத்தின் மேல் இறங்கிக் கொண்டே இருக்கிறது. வெள்ளைக்காரர்களிடம் பெற்ற சுதந்திரம் தமிழர்களுக்கு மட்டும் நஞ்சாக மாறியது ஏனோ....

பாகல் துளிர்!

பாகல் துளிர்!

by Thamil
October 18, 2025
0

முதன் முதலில் எனது கவிதை ஒன்று நூலுருவாக்கம் கண்டது எனது பாடசாலை மூலமாகவேதான். முதலாம் ஆண்டு தொடக்கம் பதினொராம் ஆண்டு வரை கற்று ஆரம்பக் கல்வியை பூர்த்தி...

அகராதி கவிதைகள்!

அகராதி கவிதைகள்!

by Thamil
October 10, 2025
0

ஒரு சில சொற்களை கொண்டு கருத்தின் தொன்மைக்கு அழைக்கும் கவிதை பாணி தனிப்பட்ட அளவில் எனக்கு அதிகம் பிடிக்கும். சொற்களை, கருத்துக்களை அடுக்காமல் ஒரே புள்ளியில் நெத்தியடியாக...

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்!

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்!

by Thamil
September 27, 2025
0

வெறுமனே வார்த்தையோடு முடிகின்ற சொற்பதமாக இல்லாது பெரும் உயிரோட்டமாக இறுக்கப்பற்றுகிற நாமமாகவே ஈழத்தமிழர்களின் பார்வையில் தமிழ்த் தேசியம் விளங்குகிறது. தமிழ்த் தேசியம் என்பது வெள்ளையர்களின் வெளியேறுகைக்கு பிறகு...

தமிழ்த் தேசியமும் குறுநலப் பித்தும்!

தமிழ்த் தேசியமும் குறுநலப் பித்தும்!

by Thamil
September 19, 2025
0

இந்நூலினுடைய தலைப்பானது மிக ஆழமானது என்பதனை பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ளமுடிகிறது. ஈழத்து தமிழர்களுடைய அரசியல் விடுதலை என்பது தமிழ்த் தேசியம் என்பதாகும். இந்தத் தமிழ்த் தேசியம் என்ற...

பால காண்டம்!

பால காண்டம்!

by Mathavi
September 13, 2025
0

அண்ணன் முத்துக்குமார் அவர்கள் மண்ணை விட்டு பிரிந்தாலும் எவரின் உள்ளத்தை விட்டும் இன்றும் பிரியவில்லை. அவர் கவிதை மேல் கொண்டுள்ள காதல் காலத்தை வென்று ஓங்கி ஒலித்துக்...

தோட்டுப்பாய் மூத்தம்மா!

தோட்டுப்பாய் மூத்தம்மா!

by Thamil
September 5, 2025
0

நூல் :- தோட்டுப்பாய் மூத்தம்மாஎழுத்தாளர் :- பாலமுனை பாறுக்விலை :- 200ரூபா ஐயா பாலமுனை பாறுக் பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது என நினைக்குறேன். ஈழத்து...

புலரி..!

புலரி..!

by Mathavi
August 23, 2025
0

நூல்:- புலரிஎழுத்தாளர்:- கல்யாண்ஜிவிலை:- ரூபாய். 450 தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் 1946ஆம் ஆண்டு தாயின் கருவில் இருந்து பூமித்தாயின் கரங்களுக்கு பிண்டமாக பிதுங்கிய அசையாத உருவமே சில...

ஈழத்தமிழர் வரலாறு..!

ஈழத்தமிழர் வரலாறு..!

by Thamil
August 8, 2025
0

நூல் :-ஈழத்தமிழர் வரலாறுஎழுத்தாளர் :- வன்னியூர் செந்தூரன்விலை :-ரூபாய். 1500 அண்மையில் வெளிவந்த ஈழத்தமிழர் நூலானது வன்னியூர் செந்தூரன் அவர்களுடைய நீண்ட கால உழைப்பாகவே வெளிப்படுகிறது. ஈழத்து...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி