“ஆளுநர்கள் ஊடாக மாகாண சபைகளை ஆள்வது தவறாகும். எனவே, அடுத்த வருட முற்பகுதியில் அநுர அரசு தேர்தலை நடத்த வேண்டும்” என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது, “நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு 5 வருடங்கள் போதாது, 15 வருடங்கள் தேவை என்று சீனத் தலைவர்கள் கூறினார்கள் என ஜே.வி.பின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார். 15 வருடங்கள் ஆள வேண்டுமெனில் அதற்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
குறைந்தபட்சம் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் மக்கள் எந்த நிலைப்பாட்டில் உள்ளனர் என்பது இந்த அரசுக்குத் தெரியவரும். எனவே, அடுத்த வருட முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அநுர அரசுக்கு சவால் விடுக்கின்றோம்.
மாகாண சபை முறைமை என்பது அரசமைப்பின் ஓர் அங்கமாகும். எனவே, அந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே வடக்கு மற்றும் தெற்கு மக்களின் கோரிக்கையாக உள்ளது” என்றார்.
Related Posts
முகநூல் அரசியலுக்கும், விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்!
"மலையகத்தில் முகநூல் அரசியலுக்கும், உண்மைக்கு புறம்பான விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து உண்மையான சேவையின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்து எதிர்காலத்தை வழிநடத்துவோம்" என தொழிலாளர் தேசிய சங்கத்தின்...
முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியமும் இரத்து!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச...
மஹிந்தவை சந்தித்த இந்திய துணைத் தூதுவர்!
இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று...
மறைந்த தென் மாகாண ஆளுநருக்கு அஞ்சலி செலுத்திய வடக்கு ஆளுநர்!
மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (18) செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினார். தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர...
அரசுக்கு எதிரான நுகேகொடை பேரணி; ரவிக்கு இன்னும் அழைப்பு வரவில்லையாம்!
"அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு தனக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த...
ஒன்பது மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு...
ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது!
தென்னிலங்கையில் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) செவ்வாய்க்கிழமை கைது...
புத்தர் சிலை விவகாரத்திற்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் குழு வேண்டும்!
"திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
தம்பதியினர் சுட்டுக்கொ*லை; தங்காலையில் பயங்கரம்!
அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று மாலை 6.15 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ....
இனவாதத் தீயை மூட்ட இனியும் இடமளியோம்!
"இலங்கையில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு நான் மட்டுமல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள். திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை...










