மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் அலங்கார உற்சவத்தில் ஆயிரகணக்கான அடியார்கள் பங்குகொண்ட பாற்குட பவனி இன்று (15) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 11 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.
சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜா ராஜகுரு கிரியா கலாபமணி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது.
இதனை முன்னிட்டு கொம்மாதுறை விநாயகர் ஆலயத்திலிருந்து ஆயிரகணக்கான அடியார்கள் பங்குகொண்ட பாற்குட பவனி நடைபெற்றது.
இதன்போது மயிலாட்டம், ஒயிலாட்டம் எனப் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் பாற்குட பவனியானது ஆலயம் வரையில் நடைபெற்றது.
ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதுடன் விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன.
இதன்போது பெருமளவான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















