• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, November 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழர்கள் மீதான இனவழிப்பு தற்போது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பாக நீட்சி பெற்றுள்ளது.!

Mathavi by Mathavi
August 15, 2025
in இலங்கை செய்திகள்.
0
தமிழர்கள் மீதான இனவழிப்பு தற்போது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பாக நீட்சி பெற்றுள்ளது.!
Share on FacebookShare on Twitter

தமிழ்த் தேசிய இனத்தின் மீது பேரினவாத இலங்கை அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட இனவழிப்புச் செயற்பாடுகள் தற்போது, கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளாக நீட்சிபெற்றுக் காணப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டுச் சந்திப் பகுதியில் 14.08.2025 நேற்று இடம்பெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை நினைவேந்தலில் பங்கேற்று கருத்துரையாற்றும்போது அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சோகமயமான ஒரு தருணத்திலே நாம் அனைவரும் ஒன்றுகூடியிருக்கின்றோம்.

குறிப்பாக பிள்ளைகளை இழந்த பெற்றோர், சகோதரர்கள், உறவினருமாக கண்ணீர் சொரிந்து சோகத்தை வெளிப்படுத்தி கொடூர செஞ்சோலைப் படுகொலை நினைவுகளுடன் இருக்கின்றீர்கள். நாமும் அந்த கொடூர படுகொலையின் கனத்த அந்த நினைவுகளைச் சுமந்தவர்களாக இருக்கின்றோம்.

ஏற்கனவே நாம் குறித்த விமானத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் அஞ்சலிகளைச் செலுத்திவிட்டுத்தான் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளோம்.

உலகில் மிகக் கொடூரமான தாக்குதல்களை, படுகொலைகளை மேற்கொண்ட இராணுவங்களில் இலங்கை இராணுவமும் ஒன்றாகும்.

வெள்ளைச் சீயுடையோடு கல்வி கற்கச் சென்ற எமது பிள்ளைகளின் மீது விமானம் குண்டுமழை பொழிந்தது. எமது பிள்ளைகளின் வெள்ளைச் சீருடைகள் குருதியால் நனைந்து சிவப்புச் சீருடையாக மாறியிருந்த கோலம், உடல்கள் சிதறிக்கிடந்த நிலைமை, இத்தகைய கெடூரமான சம்பவத்தை யாரும் மறந்துவிட முடியாது.

இந்த கொடூரம் இடம்பெற்று 19ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் கதறி அழுது தமது சோகத்தை வெளிப்படுத்துகின்றபோது, இந்தக் கொடூர படுகொலை இன்றளவும் எந்த அளவிற்கு மனங்களில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றதென்பதை நன்கு உணரமுடிகின்றது. இது என்றுமே மறக்க முடியாத ஆறாத வலியாகும்.

இலங்கை இராணுவம் கடந்த காலத்தில் வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் வருடம் முழுவதும் தமிழ் இனப்படுகொலையை மேற்கொண்டது. அவ்வாறு இராணுவத்தால் தமிழினப் படுகொலை மேற்கொள்ளப்பட்டமைக்கான சான்றுகளும், ஆதாரங்களும் தற்போது தாயகப்பரப்பின் பல்வேறிடங்களிலும் இருந்தும் வெளிப்பட்டு வருகின்றன.

எமக்கான விடிவு கிடைக்கவேண்டுமென்ற நோக்குடனும், தமிழ்த் தேசிய இனமான நாங்கள் எம்மை நாமே ஆட்சி செய்யவேண்டுமென்ற நோக்குடனும் எமது தமிழர் தாயகத்தை வழிநடத்திக் கொண்டிருந்த எம்முடைய தலைவனின் விடுதலைப் போராட்டக் கட்டமைப்பை உலகநாடுகள் இணைந்து அழித்த வரலாறு உங்கள் அனைவருக்கும் தெரியும்.

தற்போது தமிழர்கள் நாங்கள் நலிவடைந்தவர்களாக, அடிமைகளாக இருக்கின்ற நிலைகள் காணப்படுகின்றன.

தற்போது தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கு எதுவுமில்லையென்ற நிலையாகிவிட்டது. கடலிலே தொழில் செய்யமுடியாத நிலைமை, ஆறு மற்றும் குளங்களில் தொழில் செய்ய முடியாத நிலை, வயலில் தொழில் செய்ய முடியாத நிலையென எமது தமிழ் மக்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடக்கப்பட்டுள்ளனர்.

எமது தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன. நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை.

குறிப்பாக வனவளத் திணைக்களத்திடம் மாத்திரம் 432486 ஏக்கர் காணிகள் காணப்படுகின்றன. ஆனால் விடுதலைப் புலிகளின் காலத்தில் 2,22006 ஏக்கர் நிலங்களே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இந்நிலையில் கடந்த 2009ஆம் அண்டிற்குப் பிற்பாடு 02 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிலங்களை வனவளத் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கின்றது.

இவ்வாறு அரச திணைக்களங்களால் எமது தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழர்கள் முடக்கப்படுகின்ற நிலையில் எமது மக்கள் பெருமளவானோர் தாயகப் பரப்பிலிருந்து புலம்பெயர்ந்து செல்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இவ்வாறாக தாயகப்பரப்பில் தமிழர்களின் பெருக்கம் குறைவடைந்து செல்கின்ற நிலைமைகளும் ஏற்படுகின்றன.

அந்தவகையில் கடந்த காலத்தில் இலங்கை அரசால் தமிழ் இன அழிப்புக்கள் மேற்கெள்ளப்பட்டன. தற்போது தாயகப் பரப்பிலுள்ள எமது தமிழ்த் தேசிய இனத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றது.

கடந்தகால அரசாங்கங்கள் மிக அதிகளவில் ஆக்கிரமிப்புக்களையும், அபகரிப்புச் செயற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டிருந்தன. தற்போதைய அரசும் அந்த நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு அரசாகத் தெரியவில்லை. எமது மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படுமெனக் கூறுகின்றார்களே தவிர விடுவிப்பதாகத் தெரியவில்லை.

அந்தவகையிலே தற்போது நாம் செஞ்சோலைப் படுகொலையில் உயிரிழந்தவர்களை அஞ்சலிப்பதற்கு கூடியிருக்கின்றோம். இத்தகைய படுகொலைகளைச் செய்தவர்களுக்கு இறைவனால் உரிய தீர்ப்புக்கிடைக்கும் என நம்புகின்றோம்.

குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ பேராதரவுடன் ஆட்சிப்பொறுப்பேற்று அந்த மக்களாலேயே துரத்தியடிக்கப்பட்ட வரலாறுகளை நாம் கண்டிருக்கின்றோம்.

எனவே தமிழ்த் தேசிய இனத்தின் மீது இனவழிப்பை மேற்கொண்ட, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை மேற்கொள்கின்றவர்கள் அதற்கு உரிய பொறுப்புக்கூறலைச் செய்கின்ற காலம் வரும். உரிய தீர்வுகிட்டும். அதற்காக நாம் அனைவரும் காத்திருப்போம்.

படுகொலைகளின்போதும், எமக்கான விடுதலைக்காகவும் போராடியவர்களுக்கும் தொடர்ந்தும் அஞ்சலிகளைச் செலுத்துவோம். என்றும் அவர்களை நினைந்திருப்போம் – என்றார்.

Related Posts

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

by Thamil
November 12, 2025
0

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய தினம் (12.11.2025) பிரதேச...

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

by Thamil
November 12, 2025
0

"தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாச்சார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று (12)...

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

by Thamil
November 12, 2025
0

'தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து சிறுபான்மை இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்'...

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

by Thamil
November 12, 2025
0

'சட்டத்தை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மாற்ற முடியாத நிலையில் ஒரு சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆவண காப்பகம் முக்கியமானது' என சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல்...

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

by Thamil
November 12, 2025
0

யாழ்ப்பாணம், சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், மற்றையவரிடமிருந்து...

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!

by Thamil
November 12, 2025
0

"இலங்கையில் பொறுப்புக்கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம், சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம்" என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார். கடந்த...

வவுனியா – பேராறு நீர்த்தேக்க மீன்களை உண்பதை உடன் தவிர்க்கவும்!

வவுனியா – பேராறு நீர்த்தேக்க மீன்களை உண்பதை உடன் தவிர்க்கவும்!

by Thamil
November 12, 2025
0

பேராறு நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறும், அந்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைத் தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பேராறு...

போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸ் ஈடுபடவில்லையாம்!

போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸ் ஈடுபடவில்லையாம்!

by Thamil
November 12, 2025
0

"வடக்கு மாகாணத்தில் போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்" என பாதுகாப்பு பிரதி அமைச்சர்...

மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித் தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்!

மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித் தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்!

by Thamil
November 12, 2025
0

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சமகாலத்தில் சந்தித்து வருகின்றது. அதனால் 7 ஆயிரம் கரையோர குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள்....

நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு; ஒப்புக்கொண்ட சந்திரசேகர்!

நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு; ஒப்புக்கொண்ட சந்திரசேகர்!

by Thamil
November 12, 2025
0

"வடக்கு மாகாணத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரிக்க இராணுவத்தினர்தான் பிரதான காரணம். பொலிஸாரும் அதற்கு உடந்தையாக செயற்படுகின்றார்கள்" என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி