கோடி 20 இலட்சம் மக்களுக்கு சொந்தமான கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதன் காரணமாகவே இவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். நாங்கள் கடலுக்குச் சென்று எப்பொழுது கடலுக்கு வருவார்கள் அவர்களை கொண்டு வந்து சிறையில் அடைப்போம் என்று எதிர்பார்ப்பதில்லை. இந்திய கடற்பரப்புக்குள் அத்துமறி உள் நுழைந்ததாக இலங்கை மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு எந்த தீர்வும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் இந்திய மீனவர்களது போராட்டமானது நியாயமற்றது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் காணி உறுதி வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த விடயத்தை தெரிவித்த தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிக்க வருகின்ற இந்திய மீனவர்களை நாங்கள் பிடித்து சிறை வைக்கவில்லை அவர்கள் இலங்கையினுடைய எல்லைக்குள் வருவதனால் தான் இலங்கையினுடைய சட்டத்துக்கு அமைவாக கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற வடக்கு கிழக்கிலே வாழுகின்ற மீனவர்களுடைய ஜீவனோபாயத்தினை முற்றும் முழுதாக அழிக்கும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.










