இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
அந்தவகையில், தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த இரு அணிகளும், நேருக்கு நேர் மோதிக்கொண்ட இறுதி 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில், இலங்கை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 35 ஆவது ஓவரிலிருந்து ஒரு பந்துடன் விளையாடும் புதிய விதி, இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இன்று ஆரம்பமாகும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகவுள்ளது.