பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 11 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இதுவரை மழை தொடர்பான சம்பவங்களில் 57 பேர் காயமடைந்துள்ளதாகவும், அந்நாட்டு மாகாண அனர்த்த முகாமைத்துவ கழகம், இன்று (01) வெளியிட்ட அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.
பழைய கட்டிடங்கள் மற்றும் அவற்றின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.