கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இன்றைய தினம் ( 30.06.2025 ) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவினை இவ்வாறு தர்மபுரம் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான 55 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான 55 வயதுடைய பெண்ணையும் மற்றும் தடயப் பொருட்கள் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M.S.J . திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
