புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம் நடத்தத் திட்டமிட்டுள்ள ஹைக்கூ கவியரங்கத்தின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 13 ஆம் திகதி மாலை 4.30 மணிக்குக் கொழும்பு – 13, புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கவியமர்வுக்கு ஆசிரியரும், கவிஞருமான எஸ்.அழகேஸ்வரன் தலைமை ஏற்கின்றார்.
இதில் இணைந்து கொண்டு ஹைக்கூ கவிதை பாட விரும்புவோர் அன்றைய தினம் நேரில் கலந்து கொள்ளலாம்.
மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியின் தலைவர் ஷெரோனுடன் 0751670825 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.